Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்பாடு அதிகரிப்பு

அறந்தாங்கி, ஜூன் 25: அறந்தாங்கி நகராட்சி பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் ஒலி மாசு ஏற்படுவதுடன், பொதுமக்கள், வாகன ஒட்டுனர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியிலிருந்து பட்டுகோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, பேராவூரணி, ஆவுடையார்கோவில் செல்லும் சாலைகளில் நாளுக்கு நாள் நான்கு சக்கர வாகனம், சரக்கு வாகனம், டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் என வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.

இதனால், வாகனங்கள் செல்லும் போது, பின்னால் வரும் வாகனங்கள் முந்தி செல்ல அதிக அளவில் சத்தம் எழுப்பும் ஹாரன் அடித்து சத்ததிலேயே வாகனத்தை முந்தி செல்கின்றனர். வாகனத்தில் வேகமாக செல்லவும், அதிக ஹாரன் சத்தம் போட்டால் ஓதிங்கி விடுவார்கள் என்பதற்காகவும் இந்த ஹாரனை வைத்துள்ளனர். தற்போது லாரி, சரக்கு, நான்கு சக்கரவாகனங்கள், இருசக்கர வாகனத்தில் கூட அதிக சத்தம் எழுப்பும் ஹாரனை பொருத்தியுள்ளனர்.

இதனால், அறந்தாங்கி இருந்து செல்லும் சாலைகளில் வாகனங்களில் பொருத்தி உள்ள அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் பயன்பாட்டால் ஒலிமாசு ஏற்படுவதுடன், மருத்துவமனை பகுதியில் செல்லும்போது, நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கின்றனர். இதனால், அறந்தாங்கி பகுதியில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.