வேலூர், ஜூலை 16: வேலூர் அருகே அரசு மருத்துவமனை நர்ஸ் காணாமல் போன புகாரில், அவர் கடத்தப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் சத்துவாச்சாரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர்.
+
Advertisement


