Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு குழந்தைகள் இல்லத்தில் கவுன்சிலராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, மே 6: ஈரோட்டில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்க மதிப்பூதிய அடிப்படையில் கவுன்சிலர் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உளவியல் மற்றும் கவுன்சிலிங்கில் முதுகலை பட்டம் பெற்றவர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். நாளொன்றுக்கு ரூ.1,000 மதிப்பூதிய அடிப்படையில் மாதத்தில் 9 நாள்களுக்கு என ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படும். இது முற்றிலும் தற்காலிக பணியிடமாகும். இதற்கான விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி மாலை 5.30 மணிக்குள் உரிய சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், 6வது தளம், ஈரோடு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.