Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அன்னவாசலில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

விராலிமலை,ஜூன் 10: அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்து மகன் ஜெயக்குமார் (21) லாரி டிரைவர். இவர் அன்னவாசல் அருகே உள்ள தச்சன்குளம் கரையில் விறகு ஏற்றுவதற்காக சென்று உள்ளார். அப்போது வழியில் வண்டி சக்கரம் சகதியில் சிக்கி கொண்டதால், ஹைட்ராலிக் மூலம் லாரியின் பின் பகுதியை தூக்கி உள்ளார்.

இதில் மேலே சென்ற மின் கம்பி லாரியின் மேற்புறத்தில் உரசி உள்ளது. இதில் ஜெயக்குமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.