காங்கோ நாட்டில் உள்ள செம்பு சுரங்கத்தின் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

கின்ஷாஷா: ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள செம்பு சுரங்கத்தின் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், கலண்டோ செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்...

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல்

By Arun Kumar
17 Nov 2025

  சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதினாவுக்கு சென்றவர்களின் பேருந்தும் டீசல் டேங்கர் லாரியும் மோதி விபத்துகுள்ளானது. உயிரிழந்த இந்தியர்களில் பலர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

ஈரானில் செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்

By Arun Kumar
17 Nov 2025

  ஈரான்: ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல அணைகளின் கொள்ளளவு ஒற்றை இலக்கத்திற்கு சென்றுள்ளன. இதே நிலை நீடித்தால் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என அங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ...

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு: வங்கதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

By Ranjith
16 Nov 2025

டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி வங்கதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு...

கைதிகள் பரிமாற்றம் குறித்து மீண்டும் ரஷ்யாவுடன் பேச்சு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

By Ranjith
16 Nov 2025

கீவ்: கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவுடன் பேச்சு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் இடையே தலா 1000 கைதிகளை பரிமாற கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஆனது. இரண்டாம் கட்டமாக மிகவும் நோய் வாய்ப்பட்ட,காயமடைந்த கைதிகளை இரு நாடுகளும் பரிமாறினர். இரண்டாம் கட்டத்துக்கு பின்...

பஹ்ரைன் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு

By Ranjith
16 Nov 2025

நியூயார்க்: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் கனடாவில் நடந்த ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் நியூயார்க்கில் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து பேசினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் பின் ரஷீத் அல் சயானியுடன் தொலைபேசியில் அவர் பேசினார்....

பிலிப்பைன்சின் கூட்டு கடற்படை பயிற்சி எதிரொலி தென் சீனா கடலில் சீன ராணுவ விமானங்கள் ரோந்து

By Ranjith
16 Nov 2025

பீஜிங்: பிலிப்பைன்ஸ், அமெரிக்கா,ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொண்டதற்கு எதிராக தென் சீன கடலில் சீன குண்டு வீச்சு விமானங்கள் தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொண்டன. தென் சீன கடலின் 90% பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ்...

ஆயுள் தண்டனை பெற்ற நர்சுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் 200 நர்சுகள் போர்க்கொடி: குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்

By MuthuKumar
16 Nov 2025

லண்டன்: தொடர் குழந்தைக் கொலையாளி எனத் தண்டிக்கப்பட்ட நர்ஸ் லூசி லெட்பியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சக நர்சுகளே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இங்கிலாந்தில், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைக் கொன்றதாக நர்ஸ் லூசி லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தது அமெரிக்கா

By Arun Kumar
16 Nov 2025

  அமெரிக்கா: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்து நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். காபி, வாழைப்பழம், மாட்டிறைச்சி, பழச்சாறு, தக்காளி, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மீதான பரஸ்பர வரி (Reciprocal Tariff) நீக்கப்பட்டது.   ...

மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட முயன்ற GenZ போராட்டக்காரர்கள்!

By Suresh
16 Nov 2025

மெக்சிகோ: மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட GenZ போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் வன்முறை மற்றும் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி, அந்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் GenZ தலைமுறையினர், அரசு சொத்துக்களை சூறையாட முயன்றனர். ...