இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்தம் இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
ஜெருசலேம்:ஆரம்பகால ஆதாயங்களை வழங்குவதற்காக இந்தியாவும், இஸ்ரேலும் முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார். ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அவருடன் 60 பேர் கொண்ட வணிக குழுவும் சென்றுள்ளது. அமைச்சர் பியூஷ் கோயல் அந்த நாட்டின் பொருளாதாரம்...
பிரேசில் பருவ நிலை மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு ஆதரவு: இந்தியா அறிக்கை
பெலேம்: பிரேசில் பருவ நிலை மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பெலேம் நகரில் பருவ நிலை உச்சி மாநாடு கடந்த 10ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில், 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஒன்றிய சுற்றுச்சூழல்...
துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் விமானி நமன்ஸ் சியால் உடல் இமாச்சலில் தகனம்: கோவையில் தமிழக அரசு சார்பில் கலெக்டர், எஸ்பி அஞ்சலி
சிம்லா: துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் போர் விமானியின் உடல் நேற்று கோவை சூலூர் விமானப்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர். பின்பு சொந்த ஊரான இமாச்சல் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. துபாயில் கடந்த 2...
பாகிஸ்தானில் பயங்கரம்: 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபர் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,...
நைஜீரியாவில் துயரம்; 12 ஆசிரியர், 300 மாணவர்கள் கடத்தல்: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதி அமைப்பினர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளி குழந்தைகளை கடத்தி சென்றனர். இந்த தீவிரவாத அமைப்பினர், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த படுபாதக செயலில் ஈடுபட்டனர். அதேபோல் தற்போதும் நைஜீரியாவை சேர்ந்த ஒரு கும்பல், பள்ளி குழந்தைகளை கடத்தி செல்லும் சம்பவங்களில் ஈடுபடுகிறது. அதாவது, நைஜீரியாவின் வட பகுதிகளில்...
ஆட்சி கவிழ்ப்பு வழக்கு பிரேசில் மாஜி அதிபர் கைது
சாவ்பாலோ: பிரேசிலில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வியடைந்தார். ஆனால், ஆட்சியை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வீட்டுக்காவலில் இருந்த அவரை தற்போது போலீசார் சிறை காவலில் எடுத்துள்ளனர். ...
நைஜீரியாவில் பயங்கரம் 303 பள்ளி மாணவர்கள் கடத்தல்
அபுஜா: நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் உள்ள மாகா நகரில் கும்பலால் துப்பாக்கி முனையில் 25 பள்ளி மாணவர்கள் கடத்திச்செல்லப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், நைஜர் மாகாணத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள பாபிரி நகரில் விடுதியுடன் கூடிய செயின்ட் மேரிஸ் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்குள்ள 303...
பிபிசி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் இந்திய வம்சாவளி
லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை தவறாக வெளியிட்ட குற்றச்சாட்டில் பிபிசியின் தலைமை இயக்குனர், செய்தி நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் பிபிசியின் வாரிய உறுப்பினரான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமீத் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். ...
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் போதைப்பொருள்-தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பு தேவை
ஜோகன்னஸ்பர்க்: ‘போதைப்பொருள்-தீவிரவாதம் இடையேயான தொடர்பை எதிர்ப்பதில் ஜி20 நாடுகளிடையே கூட்டு ஒத்துழைப்பு அவசியம்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டு அரங்கிற்கு வந்த பிரதமர் மோடியை, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா ‘நமஸ்தே’ எனக்கூறி வரவேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி20...