எலியும் பூனையுமாக சண்டை போட்ட அதிபர் டிரம்ப்-மேயர் மம்தானி மாறி மாறி பாராட்டி புகழ்ந்தனர்: வெள்ளை மாளிகை சந்திப்பில் ருசிகரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோரான் மம்தானியை அதிபர் டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார். ‘எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை. மம்தானிக்கு ஓட்டு போடாதீர்கள். அவர் வந்தால் நியயூார்க்கை சர்வ நாசமாக்கிவிடுவார்’ என டிரம்ப் நியூயார்க் நகர மக்களை எச்சரித்தார். டிரம்பை...

மேடையில் ரத்தம் கொட்டிய நிலையில் ரகசியமாக போராடி புற்றுநோயை வென்ற நடிகை: 62 வயதில் ரியாலிட்டி ஷோவில் சாதனை

By Suresh
22 Nov 2025

லண்டன்: கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மேடையில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாகப் பரிசோதனை செய்ததில், தனக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகப் பிரபல ஹாலிவுட் நடிகை அலெக்ஸ் கிங்ஸ்டன் (62) தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அவற்றை வயது முதிர்வு அல்லது சாதாரண...

பரஸ்பரம் மோதிக்கொண்ட நிலையில் டிரம்புடன் கைகோர்த்த இந்திய வம்சாவளி மேயர்

By Suresh
22 Nov 2025

வாஷிங்டன்: கடும் விமர்சனங்களை மறந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், நியூயார்க் நகரப் புதிய மேயரும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த தேர்தலில் நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக ஜனநாயக சோசலிசவாதியான இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது இவரை, ‘கம்யூனிசப்...

G20 மாநாட்டில் புதிய முன்னெடுப்புகளை முன்மொழிந்த பிரதமர் மோடி!

By MuthuKumar
22 Nov 2025

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை இந்திய பிரதமர் மோடி முன்மொழிந்தார். அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார். ...

ஏ.ஐ-யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை

By Lavanya
22 Nov 2025

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என கூகுள் CEO சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். Al ஒரு புரட்சிகரமான வளர்ச்சி என்றாலும், தற்போது அதில் சில பகுத்தறிவற்ற தன்மை உள்ளது. இருப்பினும், AI-ன் தேவை குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ...

வங்கதேசத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு

By Arun Kumar
22 Nov 2025

  வங்கதேசம்: வங்கதேசத்தில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. டாக்கா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் டாக்காவில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இடங்களில்...

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தப்பட்டதால் அதிர்ச்சி

By Arun Kumar
22 Nov 2025

  நைஜீரியா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாபிரி நகரில் பள்ளிக்குள் புகுந்த ஆயுதக் கும்பல் 2 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு மாணவர்களை கடத்தியது. ஒரே வாரத்தில் 2வது முறையாக மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில் பள்ளிகளை தற்காலிகமாக மூட நைஜீரிய அரசு ஆணை யிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்...

கோவை விமான படைத்தளத்துக்கு சொந்தமான தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது: துபாய் விமான கண்காட்சியில் பெரும் சோகம்

By Ranjith
21 Nov 2025

* விமானி பரிதாப பலி, ஏர்ஷோ பாதியில் நிறுத்தம் துபாய்: துபாய் விமான கண்காட்சியில் தமிழ்நாட்டில் கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி...

மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ பாத்திமா தேர்வு

By Karthik Yash
21 Nov 2025

பாங்காங்: ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது. இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா போட்டியிட்டார். 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த 25 வயமு பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ்...

வங்கதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6 பேர் பலி

By Karthik Yash
21 Nov 2025

கொல்கத்தா: வங்கதேசத்தின் நர்சிங்டி நகரை மையமாகக் கொண்டு நேற்று காலை சுமார் 10.38 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இதன் அதிர்வுகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு உணரப்பட்டன. வங்கதேச தலைநகர் டாக்கா, சட்டோகிராம், சில்ஹெட் நகரங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் சுமார்...