தனிப்பட்ட விரோதம் காரணமாக டிஎஸ்பியை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதி!!

சென்னை : தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதியானது. ஐகோர்ட் உத்தரவுப்படி நீதிபதி செம்மல் மீதான புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக வன்கொடுமை...

கூடுதல் தொகை வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

By Gowthami Selvakumar
19 hours ago

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் அரசு கட்டணத்தை விட, அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்குநகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாணவர்களை மிரட்டி கூடுதல் தொகை வசூலிக்க நினைத்தால் அந்த...

சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரை முருகன் வழக்கு: வேறு நீதிபதி விசாரிக்க நீதிபதி தண்டபாணி உத்தரவு

By Ranjith
19 hours ago

சென்னை: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006-11ம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி...

ரெட்ரோஃபிட்களுக்கான தமிழக அரசின் ரூ.66 கோடிகள் மதிப்பிலான பணி ஆணையை பெற்றுள்ளது EcoFuel Systems (India) Ltd

By dotcom@dinakaran.com
19 hours ago

மும்பை , ஆகஸ்ட்: ரெட்ரோஃபிட்களுக்கான தமிழக அரசின் ரூ.66 கோடிகள் மதிப்பிலான பணி ஆணையை EcoFuel Systems (India) Ltd பெற்றுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலத்தின் பசுமைப் போக்குவரத்து இயக்கத்தை ஆதரிக்கும் முக்கிய மைல்கல்; ஆண்டுதோறும் 5.7 லட்சம் டன் CO ₂ உமிழ்வைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத் துறைக்கான...

குடிப்பழக்கமும் உடல் பாதிப்புகளும்: டாக்டர் ஆர்.கண்ணன் விளக்கம்

By Ranjith
19 hours ago

சென்னை: அரும்பாக்கம் ப்ரைம் மருத்துவமனை சேர்மனும் இரைப்பை, குடல், கல்லீரல் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.கண்ணன் கூறியதாவது: குடிப்பழக்கம் என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் இருப்பதையே குறிக்கும். நீண்ட காலம் மது அருந்துவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மது உடலில் மூளை, உணவுப்பாதை, கல்லீரல், கணையம், நரம்பு...

காசா மீதான தாக்குதலுக்கு இந்தியா உதவி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By Ranjith
19 hours ago

நாகை: நாகையில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு அளித்திருப்பதாக கூறியுள்ளார். சிறிய அளவிலான வரி குறைப்புக்கு ஒன்றிய அரசு...

பொத்தாம் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

By Nithya
19 hours ago

சென்னை: மழைநீர் வடிகால் பணிக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் காவல் நிலையத்தில் புகார் தரலாம் என்று மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணியின்போது பள்ளங்களில் விழுந்து இறந்த நபர்களின் விவரங்கள் இல்லை. எனவே பொத்தாம் பொதுவாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி அமர்வு...

மசினகுடி-மாயார் சாலையில் கம்பீரமாக கடந்து சென்ற புலி: வீடியோ வைரல்

By Ranjith
19 hours ago

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளான புலிகள், யானைகள், சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் மற்றும் பல்வேறு வகையான மான்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. யானை, மான் மற்றும் காட்டு மாடுகள் சாதாரணமாக சாலையோரங்களில் பார்க்க முடியும். சிறுத்தை மற்றும் புலி ஆகியவற்றை பார்ப்பது மிகவும் அரிது. இந்நிலையில்,...

முழுமையான நெல் கொள்முதலை உறுதி செய்க: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

By Gowthami Selvakumar
20 hours ago

திருவள்ளூர்: விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டதால் மழையில் நனைந்து வீணாகும் சூழல் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனே சீர் செய்ய வேண்டும்....

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!

By dotcom@dinakaran.com
20 hours ago

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (23.9.2025) விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்...