சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார்..!!

சென்னை: சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...

4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!!

By Nithya
15 hours ago

சென்னை: அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு...

கோவை காவல்நிலையத்தில் தற்கொலை: 2 காவலர்கள் மாற்றம்

By Nithya
15 hours ago

கோவை: கோவை காவல்நிலையத்தில் ராஜன் என்பவர் தற்கொலை செய்த விவகாரத்தில் 2 காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருந்த காவலர் செந்தில், உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   ...

தஞ்சையில் ரூ.2 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு..!!

By Lavanya
16 hours ago

தஞ்சை: கண்டியூரில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை அதிகாரிகள் அகற்றி நிலங்களை மீட்டனர். ...

தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

By Lavanya
16 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . ...

முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆடி திருவிழா: நேர்த்திக்கடனாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்வு

By Gowthami Selvakumar
16 hours ago

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடந்த குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்காக தேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழிகளை கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு கம கம விருந்தும் பரிமாறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். விழாவில் முக்கிய நிகழ்வாக குழந்தைகளை...

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

By MuthuKumar
16 hours ago

சென்னை: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நிபுணர்கள் கணித்தை விட அதிகமான அளவு பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே திமுக அரசு நிகழ்த்திய சாதனையை திமுக அரசுதான் முறியடிக்கும் என்பதை மு.க.ஸ்டாலின்...

2 ஆயிரம் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!

By MuthuKumar
17 hours ago

சென்னை: இணையம் சார்ந்த உணவு டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதற்காக நலவாரியம் அமைத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி இணையம் சார்ந்த ஊழியர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான...

விருதுநகர் அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகளை இழுத்தடித்த அதிகாரிகளுக்கு அமைச்சர் டோஸ்

By Lakshmipathi
17 hours ago

விருதுநகர் : விருதுநகரில் அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகளை இழுத்தடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரரை அமைச்சர் தங்கம்தென்னரசு கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் அரசு அருங்காட்சியகம் 10.03.2001ல் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அருங்காட்சியகத்தில் பல்வகை பிரிவுகளை சேர்ந்த 1,200 அரும்பொருட்கள் காட்சியக இருப்பில் உள்ளன. வாடகை கட்டிடத்தில் இயங்கும் அருங்காட்சியகத்தை சொந்த கட்டிடத்தில்...

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்: ஐகோர்ட் அதிரடி

By Nithya
17 hours ago

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அபராதத்தை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு...