அதிமுக கோஷ்டிகளை பாஜகவே வழிநடத்தும்: பெ.சண்முகம்
சென்னை: அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். பாஜகதான் அதிமுகவை வழிநடத்துகிறது என்பதற்கு அமித் ஷாவுடனான சந்திப்பே எடுத்துக்காட்டு. மோடியா, லேடியா என்ற ஜெயலலிதாவின் அதிமுக இன்று அண்ணன் அமித் ஷா சொல்படிதான் நடக்கும். அமித் ஷா சொல்படியே...
நாமக்கல் மாநகரில் 17 இடங்களில் சுகாதார பணிகள் துவக்கம்
*கமிஷனர் நேரில் ஆய்வு நாமக்கல் : நாமக்கல் மாநகரில் அதிகம் கவனிக்கப்படாத 17 இடங்களில், தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி, தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த 17ம் தேதி துவங்கி...
செப்.25, 27ல் நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை: செப்.25, 27ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்.26ல் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "நேற்று (22-09-2025)...
வாகன ஓட்டுநர்கள், சூப்பர்வைசர்கள் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
*பணிகள் பாதிப்பு: 300 டன் குப்பைகள் தேக்கம் புதுச்சேரி : புதுச்சேரியில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் சூப்பர்வைசர்கள் ஏற்கனவே பணி செய்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்களே மீண்டும் இந்த கம்பெனிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சூப்பர்வைசர்கள் அனைவரும் துப்புரவு...
மீன் விற்பனை மையங்களுக்கு ட்ரோன்கள் மூலம் மீன்கள் சப்ளை
*புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் புதுச்சேரி : விற்பனை மையங்களுக்கு ட்ரோன்கள் மூலம் மீன்கள் சப்ளை செய்யும் தொழில் நுட்பம் புதுச்சேரியில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் சிறுமீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள், மீன் பண்ணைகள் உள்ளிட்ட சேகரிப்பு மையங்களிலிருந்து புதுச்சேரியில் உள்ள விற்பனை மையங்களுக்கு புதிய மீன்களை விரைவாகவும், திறமையாகவும் கொண்டு செல்வதற்கான ட்ரோன்...
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்
உடுமலை : நவராத்திரியை முன்னிட்டு உடுமலையில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 1, 2-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். முதல் மூன்று நாட்கள் இந்து சமயத்தில், சக்தியின் அம்சங்களாக கருதப்படும் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள்...
ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இருந்து வரும் பூஞ்சை கழுகு, செங்கழுத்து உள்ளான், மணல் கொத்தி பறவைகள்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே பாசன பயன்பாட்டிற்காக 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். இது 500 ஆண்டுகளைக் கடந்து நீர் தேக்கமாக மாறியது. நல்லாற்றில் இருந்து வரும் தண்ணீர் இந்த குளத்தின் பெரும் பகுதியில் தேங்கி சதுப்பு நிலமாக உருவாகியது. பெரும் புதராகவும்,...
சுத்தமல்லி அருகே தனியார் தோட்டத்தில் குப்பையில் பற்றிய தீயால் புகைமூட்டம், மூச்சுத்திணறல்
*பொதுமக்கள் கடும் அவதி பேட்டை : நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லி அருகே தனியார் தோட்டத்தில் இருந்த காகித கழிவுகள், குப்பைகளில் திடீரென பற்றிய தீயால் புகைமூட்டம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக மேற்கொண்டனர். நெல்லை பேட்டை...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மண்டலத்தில் ரூ.12 கோடி விற்பனை இலக்கு
*கலெக்டர் சுகுமார் தகவல் நெல்லை : நெல்லை மண்டலத்தில் கோ- ஆப்டெக்ஸ் மூலம் ரூ.12 கோடிக்கு தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை கலெக்டர்...