கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
ஓமலூர்: கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி என்று கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் திட்டமிட்டு பரப்பும் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக 54ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலூரில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியாவை பொறுத்தவரை...
குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கா விட்டால் பதவி உயர்வுக்கு சிக்கல் நேரிடும்: காவல் ஆய்வாளர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றங்களைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காத ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. அதன்படி, பழிக்குப் பழி வாங்க துடிக்கும் நபர்களை முன்கூட்டியே அடையாளம்...
பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்: குடும்பத்துடன் பங்கேற்று உடல் பரிசோதனை செய்தனர்
சென்னை: பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று உடல் பரிசோதனை செய்தனர். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அப்போலோ மருத்துவமனை...
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காது பெண்கள் பாதுகாப்பாக இல்லை என எடப்பாடி பழனிசாமி விஷமப் பிரசாரம்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷம பிரசாரத்தை நாள்தோறும் நடத்தி கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும். கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த 6ம்...
122 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் பீகாரில் இன்று பிரசாரம் ஓய்கிறது: 11ம் தேதி வாக்குப்பதிவு
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கான இறுதிகட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில், வரலாற்று சிறப்புமிக்க வகையில் 65.08% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில்,...
சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்களுக்கு விசா மறுப்பு நோயாளிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை: டிரம்பின் புது உத்தரவால் அதிர்ச்சி
வாஷிங்டன்: சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ள வெளிநாட்டினருக்கு விசா மற்றும் கிரீன் கார்டுகளை மறுக்க அமெரிக்கா புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதால், இந்தியர் உட்பட பல நாட்டினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவில், அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழ நேரிடும் என கருதப்படும் வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிப்பதைத் தடுக்கும் ‘பொதுச் சுமை’...
காஷ்மீரில் பயங்கரம் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
குப்வாரா: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கேரான் செக்டார் பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர்....
சிறுவாபுரி முருகன் கோயில் பகுதியில் மரக்கன்று நடும் விழா
பெரியபாளையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 2025-26 ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயிலுக்கு சொந்தமான் இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் அனிதா மேற்பார்வையில் சிறுவாபுரி குளத்தை சுற்றிலும், சிவன் கோயில் இடத்திலும் 200 மரக்கன்றுகள் மற்றும் 300...
தேசிய புற்று நோய் வார விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களால் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் தேசிய மாணவர் படை முதன்மை அதிகாரி முனைவர் சச்சிதானந்தம் மற்றும் செல்வம் ஆகியோரின் ஏற்பாட்டில் மருத்துவர் பதி, புற்றுநோய் குறித்த...