மன்னார்குடியில் இலவச சிலம்பப் பயிற்சி அளிக்கும் இளைஞர்: மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் சிவா என்ற இளைஞர். சிலம்பாட்டம் என்பது தமிழர்களின் தற்காப்புக் கலை மற்றும் வீரர் விளையாட்டாகும். நீண்ட தடியை கொண்டு எதிராளியை முன்னேறவிடாமல் தாக்கி வெற்றிகாண்பது இந்த விளையாட்டு மகுத்துவம் . தமிழகத்தில் எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும்...
பாலியல் தொந்தரவால் திருச்சி அண்ணா பல்கலை மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: மாணவர் உள்பட 5 பேர் கைது
புதுக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் மாரீஸ்வரன்(21). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் முகநூல் மூலம் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவரை சந்திக்க...
ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் வந்து துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்: வேறொரு ஆணுடன் வாழ்ந்ததால் ஆத்திரம்
மண்ட்சோர்: மத்திய பிரதேசத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கர்பா நடனப் பயிற்சியில் இருந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் குடிப்பழக்கம் மற்றும் கொடுமை காரணமாக அவரைப் பிரிந்து, கடந்த சில மாதங்களாக மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோரில் வேறு ஒருவருடன் வசித்து...
நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரம்; மணிப்பூரில் மருத்துவமனை சூறை: மருத்துவர் உள்ளிட்டோர் படுகாயம்
இம்பால்; மணிப்பூரில் மருத்துவ சிகிச்சையின் அலட்சியத்தால் நோயாளி இறந்ததாகக் கூறி, உறவினர்கள் மருத்துவமனையைத் தாக்கியதில் மருத்துவர் காயமடைந்தார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் முந்தைய 24 மணி நேரத்திற்குள் இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர். சிங்சுபம் ஓங்பி என் மஞ்சு (35) என்ற பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் நேற்று காலையிலும்,...
டெல்லி புறப்பட்ட விமானத்தில் ‘போர்டிங் பாஸ்’ பெற்ற பயணி மாயம்: லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு
லண்டன்: போர்டிங் பாஸ் பெற்ற பயணி விமானத்தில் இல்லாததால், லண்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்திலிருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 162, நேற்று ஓடுதளத்திலிருந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் புறப்படத் தயாரான நிலையில், பயணிகளின் எண்ணிக்கையைச்...
அரசியல் பதற்றம், கருத்துச் சுதந்திரம் பறிப்பால்...தாய்நாடான அமெரிக்காவின் அடையாளம் தொலைந்துவிட்டது: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா வேதனை
சான் செபாஸ்டியன்: தனது தாய்நாடான அமெரிக்காவை தற்போது அடையாளம் காண முடியவில்லை என பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வேதனை தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா. சபையின் அகதிகளுக்கான நல்லெண்ண தூதருமான ஏஞ்சலினா ஜோலி, தனது கணவரும், நடிகருமான பிராட் பிட்டை விவாகரத்து செய்ததில் இருந்து பல்வேறு தனிப்பட்டப் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்....
8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி வசூல்; ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பு: தன்னிச்சையாக பெருமை தேடும் மோடி என விமர்சனம்
புதுடெல்லி: புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அவர் தன்னிச்சையாக பெருமை தேடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு வரி விகிதங்கள் இருப்பதால், அதை...
இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு: பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் அறிவிப்பு
லண்டன்: இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததால் உலக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியது. மேலும்,...
ஆசிய கோப்பை சூப்பர் சுற்றில் இந்தியா அபார வெற்றி; பாக். வீரர்கள் தேவையின்றி திட்டியதால் பேட்டால் வெளுத்து வாங்கினேன்: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி
துபாய்: ஆசியக் கோப்பை 20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஃபர்ஹான் 58 ரன், கடைசி நேரத்தில் களமிறங்கிய அஷ்ரப் 8 பந்துகளில்...