இரண்டாம் கட்ட தேர்தல் பீகாரில் 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: 4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு; 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பீகாரில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி...

திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் பெண்களுக்கு ரூ.1000 திட்டம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

By Karthik Yash
39 minutes ago

புதுக்கோட்டை: மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும் போது, திராவிட மாடல் 2.0 அரசிலும் மாதம்தோறும் 1000 உதவித்தொகை நிச்சயம் தொடரும் என்று புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில்...

தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் உள்பட தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலை மையங்கள்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்; முதியவர்களுடன் கேரம் விளையாடி மகிழ்ச்சி

By Karthik Yash
40 minutes ago

திருச்சி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள் மற்றும் 2 தொழில்துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையில்...

செங்கோட்டையன் கதை முடிந்தது எஸ்ஐஆர் பணிகள் அவசியம்: எடப்பாடி பழனிசாமி வக்காலத்து

By Karthik Yash
41 minutes ago

கோவை: செங்கோட்டையன் கதை முடிந்து போனது, எஸ்ஐஆர் பணி முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடந்து வருகிறது. பல சட்டமன்ற தொகுதிகளில் இறந்த வாக்காளர்களின் பெயர், வீடு இடமாற்றம் செய்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து...

எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி.தினகரன் பதில் துரோகம் அதன் வேலையை காட்டும்: ராயப்பேட்டைக்கு வெளியே கூட்டணிக்கு வரும்படி கூவிக்கூவி அழைக்கின்றனர்

By Karthik Yash
an hour ago

சென்னை: சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். விஜய்யை கூட்டணிக்கு வா வா என்று கூவி பார்த்தார்கள். ஆனால் தெளிவாக அவருடைய...

அறநிலையத்துறை கோயில்கள் சார்பில் 70 வயது மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

By Karthik Yash
an hour ago

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசாமி கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் நேற்று நடந்தது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 2,000 மூத்த தம்பதியினர்...

டிஜிட்டில் இந்தியா என்று முழங்கியவர்கள் இப்போது பேப்பர், பேனாவுடன் ஏன் அலைகிறீர்கள்? தேர்தல் ஆணையருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் சரமாரி கேள்வி

By Karthik Yash
an hour ago

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்கும்படி கோரிக்கை வைத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம். ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? இந்த பணியில் எத்தனை ஊழியர்...

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது

By Arun Kumar
4 hours ago

  டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேர் படுகாயம் அடைந்து 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்த நிலையிலேயே 8 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் டெல்லி செங்கோட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது டெல்லி...

கொலை வழக்கில் 75 ஆண்டு சிறை தண்டனை 16 ஆண்டில் விடுதலையான ‘ராப்’ பாடகர்: நண்பர்கள் உற்சாக வரவேற்பு

By Arun Kumar
7 hours ago

  நெவார்க்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரபல அமெரிக்க ராப் பாடகர் மேக்ஸ் பி, 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஹார்லெம் பகுதியைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் சார்லி விங்கேட், தனது மேடைப் பெயரான ‘மேக்ஸ் பி’ மூலம் பரவலாக அறியப்பட்டவர். கடந்த 2006ம் ஆண்டு நடந்த...

ரூ.3,700 கோடி மோசடி மன்னன் சிறையில் இருந்தபடியே நீதிபதிக்கு மிரட்டல்: போலீஸ்காரரின் போனை பயன்படுத்தியது அம்பலம்

By Arun Kumar
7 hours ago

  லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிறையில் உள்ள கைதி, போலீஸ் கான்ஸ்டபிள் செல்போனைப் பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘பான்சி’ திட்டத்தின் மூலம், சுமார் 3,700 கோடி ரூபாய் சைபர் மோசடி செய்த வழக்கில்...