பி.ஆர்.எஸ். கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முயற்சி: சந்திர சேகரராவின் மகள் கவிதா பரபரப்பு குற்றசாட்டு
தெலுங்கானா: பாஜகவுடன் தங்கள் கட்சியை இணைக்க பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு உள்ளேயே கருப்பு ஆடுகள் இருப்பதாக அந்த கட்சியின் எம்.எல்.சியும் சந்திர சேகரராவின் மகளுமான கவிதா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். பி.ஆர்.எஸ் கட்சியில் மறைமுகமான உட்கட்சி பூசல் கவிதாவின் புகாரால் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக இருந்த கே. சந்திர...
மருத்துவ துணைப் படிப்பு.. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: நடப்பு கல்வியாண்டு முதலே அமல்!!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2023-24ம் கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட...
ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜர்!
டெல்லி: ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக...
5 லட்சம் பக்தர்கள் வரை வருகை தர உள்ளதால் ஆடி கிருத்திகையில் திருத்தணி கோயிலில் அன்னதானம் வழங்க கடும் கட்டுப்பாடு: முன்பதிவு அவசியம்
திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க முன்பதிவு அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது....
நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி பசுமையாக மாறிய ராமந்தாங்கல் ஏரி: பறவைகளுக்கு தனி தீவு பட்டாம்பூச்சி தோட்டம்
சிறப்பு செய்தி சோழிங்கல்லூரில் உள்ள ராமந்தாங்கல் ஏரி சுற்றுச்சூழல் முறையில் மனம் கவரும் வகையில் பசுமை ஏரியாக சென்னை மாநகராட்சி மீட்டெடுத்துள்ளது. சென்னை, இந்தியாவின் நீர்த் தலைநகரம் என்று அழைக்கப்படுவது முற்றிலும் உண்மையான ஒன்றாகும். இதற்கு காரணம் மூன்று ஆறுகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், பல நடுத்தர அளவிலான குளங்கள், கோயில் குளங்கள், இணைப்பு கால்வாய்கள், பரந்த...
கர்நாடக அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தம்: ஒசூரில் இருந்து பணிக்கு செல்வோர் பாதிப்பு
ஓசூர்: கர்நாடகாவில் இன்று காலை முதல் அம்மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் கர்நாடக ராசு பேருந்துகள் ஓசூர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை ஒரு நாள் ஒத்திவைக்குமாறும்...
பாஜக அடைந்த வெற்றி என்பது திருட்டுத்தனமானது என ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு: முரசொலி விமர்சனம்
சென்னை: முரசொலி வெளியிட்ட தலையங்கத்தில்; கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றி என்பது 'திருட்டுத்தனமானது' என்று பகிரங்கமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் மக்களாட்சி மரபை குழிதோண்டிப் புதைக்கும் செயல்களுக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கும் சந்தேகத்தை இது எழுப்புகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு...
திருப்போரூரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை
திருப்போரூர்: திருப்போரூர் கால்நடை மருத்துவமனைக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், இள்ளலூர், ஈச்சங்காடு, காயார், வெண்பேடு, தண்டலம், ஆலத்தூர், மடையத்தூர், சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட...
வேலூரில் நகை திருட்டு.. எல்லையில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மத்திய பாதுகாப்பு படை பெண் போலீஸ்!!
வேலூர்: வேலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் காலாவதி, நகைகள் திருடு போனதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்த காலாவதி. இவர் காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படையில் (CRPF) பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை குமாரசாமி (வயது 65). அவரது வீட்டில் தந்தை குமாரசாமி வசித்து வரும்...