பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சதுர்வேதி சாமியார் மீது வழக்குப்பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் ஸ்ரீராமனுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் வெங்கட சரவணன் (எ) பிரசன்ன வெங்கடா சதுர்வேதி சாமியார் என்பவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். இவர் தன்னை ‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று அறிவித்து...

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் விழுந்த மரம்: 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

By MuthuKumar
22 Sep 2025

திண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து மேல் மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது கனமழையும், ஒரு சில நேரங்களில் சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் மரங்கள் முறிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று மாலையில் சுமார் ஒரு...

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

By Gowthami Selvakumar
22 Sep 2025

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளனர், இந்த முடிவில் பாலஸ்தீன வரவேற்றுள்ளது. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில்...

AC ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்பை திருடுவதால் ரூ.1 கோடி இழப்பு: ரயில்வே வாரியம் அதிரடி முடிவு!

By Nithya
22 Sep 2025

டெல்லி: AC ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகளை மக்கள் திருடுவதால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்டதூர ரயில்களில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை, ஒரு தலையணை, 2 படுக்கை விரிப்புகள், முகம்...

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் முன்னெடுப்பு: மத்திய அமைச்சர் பேச்சு

By MuthuKumar
22 Sep 2025

கோவை: சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார். ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக...

புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை, மகாளய அமாவாசை எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்: காசிமேட்டில் மக்கள் கூட்டம் குறைந்தது, வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை சரிவு

By Ranjith
21 Sep 2025

சென்னை: புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, மகாளய அமாவாசை காரணமாக நேற்று சென்னையில் இறைச்சிக் கடைகளில் மட்டன், சிக்கன் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. காசிமேட்டில் மக்கள் கூட்டம் என்பது வெகுவாக குறைந்திருந்தது. வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில்...

பாஜ நடத்தி வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும்: வக்பு சட்டத்தில் அதிமுக கபட நாடகம், இஸ்லாமியர்களுக்காக நிற்கும் ஒரே இயக்கம் திமுக தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By Ranjith
21 Sep 2025

சென்னை: பாஜ நடத்தி வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நபிகள் நாயகம் அவர்களின் 1500வது பிறந்தநாள் விழாவில் அவர் பேசியதாவது: பழமைவாத அடக்குமுறைகளை எதிர்த்து, ஏழைகள் மீது கருணை பொழிந்து, பணக்காரர்களிடம் இருக்கும் பணம்; மற்றவர்களுக்கும் தர வேண்டியது, உனது நடத்தை...

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இந்தியா அபார வெற்றி

By Arun Kumar
21 Sep 2025

  துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று முன்தினம் நடந்த முதல் சூப்பர்...

டெல்லியில் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் திடீர் சந்திப்பு: டிடிவி, ஓபிஎஸ்சை கூட்டணியில் சேர்க்க அழுத்தம்

By Ranjith
21 Sep 2025

சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி, ஓபிஎஸ்சை மீண்டும் கூட்டணி சேர்க்க வேண்டும் என்று எடப்பாடிக்கு நயினார் நாகேந்திரன் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டும் மே மாதம் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ள...

எச்-1பி விசா குறித்து டிரம்ப் நிர்வாகம் விளக்கம்; புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ரூ.88 லட்சம் கட்டணம்: தற்போது விசா வைத்திருப்போருக்கு கிடையாது, அமெரிக்காவிலிருந்து வந்து, செல்ல தடையில்லை

By Ranjith
21 Sep 2025

வாஷிங்டன்: புதிதாக எச்-1பி விசா விண்ணப்பிப்போருக்கு மட்டுமே ஒருமுறை கட்டணமாக ரூ.88 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசு...