சென்னை ஹைட்ராலிக் இயந்திரம் மோதி தொழிலாளி பலி
சென்னை: சென்னை அண்ணா சாலையில் திரையரங்கில் புரஜக்டரை சுத்தம் செய்த ஊழியர், ஹைட்ராலிக் இயந்திரம் மோதி உயிரிழந்தன. 10 ஆண்டுகளாக திரையரங்கில் பணியாற்றி வந்த வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் (39) உயிரிழந்தன. ...
ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு: தசரா, தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று காலையில் தங்கம் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன்...
இந்தியாவில் முதன்முறையாக பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், கார், ஆட்டோ என ஒரே பயணச்சீட்டில் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்: சென்னை ஒன்று செல்போன் செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே பயணச்சீட்டில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கார், ஆட்டோ ஆகிய வாகனங்களில் பயணம் செய்யும் வகையில் ‘சென்னை ஒன்று’ என்ற செல்போன் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின்...
ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
சென்னை: ஜிஎஸ்டி வரிகுறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5%,, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி வரி குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர்,...
நடைமுறைக்கு வந்த மாற்றம் அமலுக்கு வரவில்லை அஞ்சல்துறையில் காப்பீடு தொகைக்கு செப்டம்பர் இறுதிவரை ஜிஎஸ்டி உண்டு: காப்பீடுதாரர்கள் ஏமாற்றம்
நாகர்கோவில்: அஞ்சல் துறையில் காப்பீடு தொகைக்கு செப்டம்பர் இறுதி வரை ஜிஎஸ்டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் காப்பீடுதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆயுள் காப்பீட்டு துறையில் வரி தீர்வை எளிதாக்கும் வகையில் ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தனிநபர் ஆயுள் காப்பீட்டு சேவைகளில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)...
இருமொழிக் கொள்கையில் படித்ததால் தான் உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள்: மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
சிவகங்கை: இருமொழி கொள்கையால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் தமிழர்கள் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கையே காரணம் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு...
தொகுதி, ஓட்டுகள் முக்கியமில்லை வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை பயணித்துள்ளேன்: அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு
இட்டாநகர்: ‘ஒரு மாநிலத்தில் எத்தனை தொகுதிகள் இருக்கின்றன, எத்தனை ஓட்டுகள் இருக்கின்றன என்பது முக்கியமில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை பயணித்துள்ளேன்’ என அருணாச்சல பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசி உள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் ரூ.5,100 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இட்டா...
உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம் ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்: 100 கிமீ தூக்கிச்சென்று யமுனை நதியில் தூக்கி வீசியது அம்பலம்
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகான்ஷா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும்...
எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை: நாஸ்காம் கணிப்பு
புதுடெல்லி: எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நாஸ்காம் கூறி உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான எச்-1பி விசா கட்டணம் ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதன் தாக்கம் தொடர்பாக இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எச்-1பி விசா...