ஓபிஎஸ் வெளியேறியது வருத்தம்: டிடிவி.தினகரன் கவலை

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை உருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்க கூடாது. மீண்டும் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லியில்...

எழுச்சி பயணத்திற்கு மக்கள் ஆதரவு: எடப்பாடி நன்றி

By MuthuKumar
03 Aug 2025

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’’ என்ற உயரிய லட்சியத்துடன் கோவையில் கடந்த ஜூலை 7ம் தேதி எனது எழுச்சி பயணத்தை தொடங்கினேன். இதுவரை 21 நாட்களில், 14 மாவட்டங்கள், 61 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். 25 லட்சம் மக்களை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன்....

பாஜ தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் நயினார் குறித்து ஓபிஎஸ் சொன்னதை ஏற்க மாட்டோம்: பொங்கும் தமிழிசை

By MuthuKumar
03 Aug 2025

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை பார்த்து தினம் தினம் போராட்டம் என்று கூறுகிறார். தினம் தினம் போராட்டம் நடத்தும் அளவுக்கு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன அநீதியை இழைத்து விட்டது? ராகுல் காந்தியை என்ன...

சதியால் வீழ்த்தப்பட்ட வீரத்தின் விளைநிலம்: அன்புமணி அறிக்கை

By MuthuKumar
03 Aug 2025

சென்னை: பாமக. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளையர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்த சிலரில் ஒருவரும், ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 221ம் நினைவுநாள் இன்று (நேற்று) கடைபிடிக்கப்படுகிறது. போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் சின்னமலையை...

4 கார்களில் மாறிமாறி சென்று கள்ள உறவு வைக்கும் இயக்கம் திமுக கிடையாது: எடப்பாடிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

By MuthuKumar
03 Aug 2025

சென்னை: நான்கு கார்களில் மாறிமாறிச் சென்று கள்ள உறவை வைத்துக்கொள்ளும் இயக்கம் திமுக கிடையாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி ஓட்டேரி, பட்டாளம், புளியந்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகத்திற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர வளர்ச்சி குழும...

தே.ஜ. கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது குறித்து பாஜ தலைமை பதில் சொல்லும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

By MuthuKumar
03 Aug 2025

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டியில், ‘‘தீரன் சின்னமலை வெள்ளையர்களை எதிர்த்து மிகப்பெரிய...

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது குறித்து எங்களது தலைவர்கள் பதில் அளிப்பார்கள்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

By Suresh
03 Aug 2025

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது குறித்து எங்களது தலைவர்கள் பதில் அளிப்பார்கள் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் அவரது திருவுருவ சிலைக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை...

ஓபிஎஸ் குற்றச்சாட்டு: நயினார் நாகேந்திரன் மறுப்பு!

By Arun Kumar
03 Aug 2025

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பற்றி குறை கூறினாலும் நான் அவரைப் பற்றி குறை கூற மாட்டேன்; முதல்வரை சந்திப்பதற்கு முந்தைய நாள் கூட நான் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டேன்; ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னும் வரவில்லை. 6 முறை போனில் தொடர்புகொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை" என்ற முன்னாள்...

பால் கொள்முதல் விலை உயர்த்த பரிசீலனை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

By MuthuKumar
02 Aug 2025

ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் வளத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் மனோஜ் தங்கராஜ், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின், அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி: ஆவின் மூலம் பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவரை வாக்காளராக சேர்த்தால் அரசியல் தலைகீழாகும்: திருமாவளவன் கண்டனம்

By MuthuKumar
02 Aug 2025

திண்டிவனம்: வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில்...