தவெக முடிவால் தேஜ கூட்டணிக்கு பின்னடைவா? நயினார் பதில்
மேட்டுப்பாளையம்: தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்னும் தலைப்பில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தார். முன்னதாக காரமடை ரங்கநாதர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார். அப்போது பேட்டியளித்த அவரிடம் தவெக பொதுக்குழுவில், விஜய் தலைமையில் தான்...
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் எஸ்.ஐ.ஆர். பணிகளை கைவிட வேண்டும்: சிஐடியு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோவை: கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில மாநாடு நேற்று (வியாழன்) தொடங்கியது. வருகிற 9ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஸ்தூபிக்கு மலர்தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர்...
அரசியல் என்றால் என்ன என்று விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்: ரவிக்குமார் எம்.பி அட்வைஸ்
விழுப்புரம்: விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக என கூறிவிட்டு இப்ேபாது திமுக தான் தனக்கு எதிரி என பேச ஆரம்பித்துள்ளார். தற்போது பாஜக குறித்து பேசுவதில்லை. விஜய்யுடன் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டு புதியதாக கட்சி ஆரம்பித்து கூட்டணி வைத்தால்...
ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது: டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி
சென்னை; ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெல்லாது. தேர்தலில் பழனிசாமிக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றிபெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம்...
தலைமை பொறுப்புக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
சென்னை: தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெல்லாது. தேர்தலில் பழனிசாமிக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றிபெற முடியாது...
அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது நான் செய்த தவறு: ராமதாஸ் பரபரப்பு பேட்டி
விழுப்புரம்: நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்; அன்புமணி தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அரசியலில் சில தவறுகளை நான் செய்ததுண்டு. நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது....
முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு தவெக தலைமையில் தான் கூட்டணி: சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்; மும்முனைப் போட்டி உறுதியானது
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக கட்சி தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை தவெக தலைவருக்கே வழங்கி மாமல்லபுரத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று...
எஸ்ஐஆரை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் குறைவான நேரத்தில் நடத்துவது சந்தேகத்தை கிளப்புகிறது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை: எஸ்ஐஆரை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் குறைவான நேரத்தில் நடத்துவது சந்தேகத்தை உள்ளாக்கியுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை சார்பாக எஸ்ஐஆர்யை எதிர்கொள்வது எப்படி” எனும் தலைப்பில் சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான கருத்தரங்கம் மண்ணடியில் உள்ள தலைமையகத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கில் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி...
கோவை கல்லூரி மாணவி கூட்டு வல்லுறவு கொடூரம் பெண்களுக்கான பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தக் கொடிய குற்றவாளிகளைக் தப்பித்து ஓட முயற்சித்த போது, அவர்களைக் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 2024 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின்...