டெல்லியில் நவம்பர் 16ம் தேதி மாநாடு: ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வக்பு திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறக்கூடியவற்றிற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய வக்பு வாரியத்தில் அதிகபட்சம் 4 இஸ்லாமியர் அல்லாதவரும், மாநில...

சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது: உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீச்சு

By Neethimaan
19 Sep 2025

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்துள்ள நிலையில், உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளாக இருப்பவர் பாலு. தேர்தல் பொறுப்பாளராக மொரப்பூரைசேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சிக்கு வேலை செய்யாதவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதன்படி பகுதிகள்,...

ராசிபுரம், சேந்தமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம்: 20, 21ம் தேதி நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

By Neethimaan
19 Sep 2025

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (19ம் தேதி) மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார சுற்றுப்பயணத்தை நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். இன்று (வெள்ளி) மாலை 5 மணிக்கு, ராசிபுரம் பஸ்நிலையம் அருகே எம்ஜிஆர் சிலை அருகில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சேந்தமங்கலம் தொகுதியில் அக்கியம்பட்டியில்...

சொல்லிட்டாங்க...

By Ranjith
18 Sep 2025

* வாக்குத் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் நேரடியாக முயற்சி செய்கிறார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. * வியர்த்ததால் கர்சீப் எடுத்து முகத்தை துடைத்தேன். ஆனால் அதை முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக அவதூறு பரப்பியுள்ளனர். முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

வழிபாட்டு உரிமையில் சமரசம் செய்து கொள்ள முடியாது: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு செல்வப்பெருந்தகை வரவேற்பு

By Karthik Yash
18 Sep 2025

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு கோயில்களில் வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். தமிழ்நாட்டு மக்கள்...

தமிழக எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருப்பவர் முகத்தை மறைத்துக்கொண்டு அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? திமுக ஐடி விங்க் கேள்வி

By Karthik Yash
18 Sep 2025

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருப்பவர், முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன் என்று திமுக ஐடி விங்க் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக ஐடி விங்க் நேற்று எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்? என்ற தலைப்பில் ஒரு பதிவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வெள்ளை அரசு...

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு கூட்டம் தமிழகம் முழுவதும் திமுக மாவட்டரீதியாக 20,21ம் தேதிகளில் நடைபெறுகிறது: திமுக தலைமை அறிவிப்பு

By Karthik Yash
18 Sep 2025

சென்னை: திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு கூட்டம் நாளை(20ம்தேதி) மற்றும் 21ம்தேதி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொள்கிறார். திருவாரூரில் கே.என்.நேரு, கரூரில் திருச்சி சிவா, கோவை வடக்கில் ஆ.ராசா, கன்னியாகுமரி கிழக்கில் கனிமொழி...

மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது திமுக கூட்டணி புனிதமானது: கமல்ஹாசன் எம்பி பேச்சு

By Karthik Yash
18 Sep 2025

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ம.நீ.ம.வுக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது...

காசா மீதான போரை உடனடியாக நிறுத்த கோரி சென்னையில் பேரணி: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு

By Karthik Yash
18 Sep 2025

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களை சந்தித்து பேசியதாவது: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் சூழலில் இதனை இனைப்படுகொலை என ஐநா அறிவித்திருப்பதால் போரில் மற்ற நாடுகளும் தலையிட முடியும். இந்தியாவிலிருந்து இஸ்ரேல் தூதரகத்தை இந்தியா வெளியேற்ற வேண்டும். காசா...

காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

By Karthik Yash
18 Sep 2025

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உயிருக்கு போராடும் காசா, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள் ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை...