பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தல்: 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
பாட்னா: பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தலின் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 243 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக...
அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
டெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 'குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான்...
1 கோடி பேரை நீக்குவார்கள்: அதிமுக மாஜி அமைச்சர் சொல்கிறார்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சுகபுத்ராவிடம் நேற்று மனு அளித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே பெற ஆவண செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம். உண்மையான வாக்காளர்களை நிராகரிக்க கூடாது. போலி வாக்காளர்களை...
செங்கோட்டையன் கதை முடிந்தது எஸ்ஐஆர் பணிகள் அவசியம்: எடப்பாடி பழனிசாமி வக்காலத்து
கோவை: செங்கோட்டையன் கதை முடிந்து போனது, எஸ்ஐஆர் பணி முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடந்து வருகிறது. பல சட்டமன்ற தொகுதிகளில் இறந்த வாக்காளர்களின் பெயர், வீடு இடமாற்றம் செய்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து...
மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தல்
சென்னை: மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: மேற்கு ஆப்ரிக்கா-மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த பொன்னுதுரை,...
வரும் 13ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 13ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது. இதில், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து...
எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி.தினகரன் பதில் துரோகம் அதன் வேலையை காட்டும்: ராயப்பேட்டைக்கு வெளியே கூட்டணிக்கு வரும்படி கூவிக்கூவி அழைக்கின்றனர்
சென்னை: சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். விஜய்யை கூட்டணிக்கு வா வா என்று கூவி பார்த்தார்கள். ஆனால் தெளிவாக அவருடைய...
டிஜிட்டில் இந்தியா என்று முழங்கியவர்கள் இப்போது பேப்பர், பேனாவுடன் ஏன் அலைகிறீர்கள்? தேர்தல் ஆணையருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் சரமாரி கேள்வி
சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்கும்படி கோரிக்கை வைத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம். ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? இந்த பணியில் எத்தனை ஊழியர்...
காங்கிரசில் எஸ்ஐஆர் பணி கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிறப்பு தீவிர திருத்தத்தை கண்காணிக்கவும், பிஎல்ஏ 2 நியமனங்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தீவிரப்படுத்தவும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்துக்கு, அசன் மவுலான எம்எல்ஏ, இமயா கக்கன், லட்சுமி ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தாம்பரம் நாராயணன், வழக்கறிஞர் மதுமதி, எஸ்.டி.நெடுஞ்செழியன், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு...