எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்” இன்று காலை 10 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது...
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காது பெண்கள் பாதுகாப்பாக இல்லை என எடப்பாடி பழனிசாமி விஷமப் பிரசாரம்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷம பிரசாரத்தை நாள்தோறும் நடத்தி கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும். கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த 6ம்...
வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.10 கோடி கையெழுத்து வாங்கிய காங்கிரசார்: லாரி மூலம் செல்வப்பெருந்தகை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில், வாக்குத் திருட்டுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்து படிவங்கள் பெறப்பட்டது. இவற்றை லாரி மூலம் டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்...
வரலாறு தெரியாமல் மிரட்டிப் பார்க்கின்றனர் திமுக போல வெற்றி பெற பகல் கனவு காண்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. வரலாறு தெரியாதவர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘திமுக...
என்னை சமாளிக்க 30 ஹெலிகாப்டர்கள் களமிறக்கம்: 37 வயது இளைஞரை கண்டு பாஜகவுக்கு பெரும் பீதி: முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி ஆவேசம்
பாட்னா: 37 வயது இளைஞனான தனக்கு பாஜக பயப்படுவதாகவும், தன்னை எதிர்கொள்ள 30 ஹெலிகாப்டர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், ஒரே...
அவங்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவங்களையும் விட்டா வேறு வழி இல்லை: என்னை அழைத்தது பாஜதான்; அவர்கள் சொன்னதை செய்தேன்; மனம் திறந்தார் செங்கோட்டையன்
* நானும், சசிகலாவும் கை காட்டவில்லை என்றால் எடப்பாடி முதல்வர் கிடையாது கோபி: அவங்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவங்களையும் விட்டா வேறு வழி இல்லை, என்னை அழைத்தது பாஜ தான். அவர்கள் சொன்னதை செய்தேன். நானும், சசிகலாவும் கை காட்டவில்லை என்றால் எடப்பாடி முதல்வராகி இருக்க முடியாது என்று செங்கோட்டையன் உண்மையிலேயே மனம் திறந்து பேட்டி...
பாஜவை சேர்ந்த யாரை செங்கோட்டையன் சந்தித்தார்? நயினார் கேள்வி; இன்னுமா தூக்கம் தெளியல என நெட்டிசன்கள் கலாய்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வந்தே மாதரம் 150 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுடன் வந்தே மாதரம் பாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜ. மாநில தலைவா் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக...
திரைப்பட புகழை வைத்துக்கொண்டு அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார் விஜய்: அதிமுக தாக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த தளிஅள்ளி கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே தான் நேரடி போட்டிகள் இருந்து...
ஆட்சியை ஆட்டைய போட நினைத்த டிடிவியின் பருப்பு எடப்பாடியிடம் வேகவில்லை: ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? பாவம் உங்களை சும்மா விடாது; உதயகுமார் சாபம்
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து டிடிவி.தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் டிடிவி.தினகரன். என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கூட உத்தரவிட்டார். அதனால்...