மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வைரல் அதிமுகவை அழிக்க நினைத்தார் எம்ஜிஆர் எடப்பாடியை ஆதரிக்க நாங்க லூசுகளா? மைண்ட் வாய்சுன்னு நினைச்சு பேசிட்டாரோ...
திண்டுக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சர்ச்சை பேச்சுக்கும், உளறல் பேச்சுக்கும் பெயர் போனவர். இந்நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அதிமுகவை அழித்து விடலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எம்ஜிஆர் நினைத்ததை போல, இந்த கட்சியை அசைத்து விடலாம் என...
தேசிய தலைமை தொடர்ந்து புறக்கணிப்பு எதிரொலி தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை முடிவு? ஆதரவாளர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியதால் பரபரப்பு
சென்னை: பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமாலை தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். இதுகுறித்தெல்லாம் டிடிவி.தினகரனுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை இருந்தபோது ஏராளமான தலைவர்களை பதவியை விட்டு தூக்கினார். மேலிட செல்வாக்கோடு...
எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள் பாமகவும், சின்னமும் நம்மிடம்தான் உள்ளது: மாவட்ட செயலாளர்களுக்கு ராமதாஸ் தெம்பு
திண்டிவனம்: எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள். பாமகவும், சின்னமும் நம்மிடம்தான் உள்ளது என்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் ராமதாஸ் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே...
தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர் விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை: தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மெய்சிலிர்த்து நிற்கிறேன். விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டை சேர்ந்த ஓவியர் கோவிந்தராஜன் எழுதிய கடிதமும் ஓவிய புத்தகமும் எனக்கு வந்தடைந்தது....
இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பகலில் ஐதராபாத் வழியாக, பீகார் புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பாட்னாவில் வாக்கு திருட்டு பேரணியை ராகுல்காந்தி தொடர்ந்து நடத்தி வந்தார். இதற்காக அஜெண்டாவில் விவாதிக்க இருப்பதால்,...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் கேட்பவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு பாஜ கோரிக்கை
சென்னை: தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுக்க நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் 60 வரை கமிஷன் கேட்டு மிரட்டுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு...
15 நாளுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்க வேண்டும்: எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும். வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி குறித்து அறிக்கையை அளிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்,...
தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
விருதுநகர்: 7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்; அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி தொடர்பாக அறிக்கை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். திமுகவில் தலைமை...