தென்கொரியா, மொரீசியஸ், ஜப்பானிலும் போட்டியிடுவார் :பீகாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி குறித்து ராமதாஸ் கிண்டல்
விழுப்புரம் : போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "நாங்கள்தான் பாமக எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது. பீகாரில் போட்டியிடுவதாக போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும். பீகாரில்...
அன்புமணி தரப்பு போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்று வந்துள்ளதாக ராமதாஸ் குற்றச்சாட்டு
விழுப்புரம்: அன்புமணி தரப்பு போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்று வந்துள்ளதாக ராமதாஸ் குற்றச்சாட்டினார். போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என ராமதாஸ் கூறினார். ...
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி இருக்கும் வரை தே.ஜ.கூட்டணிக்கு வரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அண்ணாமலை முயற்சியால்தான் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தோம் என்றும் விளக்கம் அளித்தார். ...
சுமை என தெரிந்தும் ஏன் ஜிஎஸ்டி விதித்தனர்? - சீமான் கேள்வி
சென்னை: மக்களுக்கு சுமையாக இருந்ததால் தான் ஜிஎஸ்டியை குறைத்துள்ளீர்கள். மக்களுக்கு சுமையாக இருக்கிறது என தெரிந்தும் வரியை விதித்த நீங்கள் என்ன தலைமையாளர்கள்? என சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கிறீர்கள். ஜிஎஸ்டி-க்கு பிறகு...
சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக பீகாரில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே, ராகுல்காந்தி பங்கேற்பு
பாட்னா: பீகாரில் அக்டோபர் மாதம் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பீகாரில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளது. காலை 10மணிக்கு சதகத் ஆசிரமத்தில் கூட்டம் நடைபெறும். இந்தக்...
பாஜவை நம்பி வந்தவர்களை பொதுவெளியில் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது: நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை சூடு; ஓபிஎஸ்சையும் விரைவில் சந்திப்பேன் என பேட்டி
சென்னை: பாஜவை நம்பி வந்த தலைவர்களை பொது வெளியில் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்று நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை சூடு வைத்துள்ளார். இது பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவிகீதா ராதா மறைவையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு...
8 ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்கலாமே? ஜிஎஸ்டி விவகாரத்தில் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை: 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரிகுறைப்பை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்கலாமே? என ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம்...
செங்கோட்டையன் சொந்த ஊரில் அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி
கோபி: செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டுப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊரில் எடப்பாடி அதிர்ச்சி கொடுத்து உள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு அதிர்ச்சி...
2 இட்லி போதும் என்று கூறும்போது 3வது இட்லியை வாயில் திணிப்பது ஏன்? மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் காட்டம்
திண்டுக்கல்: தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம், இங்கு மும்மொழி கொள்கை தேவையில்லாதது என திண்டுக்கல்லில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திண்டுக்கல்லில் தேசிய பூப்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணிக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பழநி ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் காந்திராஜன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் விஜய் முன்னிலை வகித்தனர்....