காணாமல்போன 6 வயது சிறுவன் ஓடையில் இருந்து சடலமாக மீட்பு

ஈரோடு: சூரம்பட்டி அருகே குழந்தைகள் நல மையத்தில் இருந்து காணாமல்போன சக்கரவர்த்தி - சாந்தகுமாரி தம்பதியின் மகன் 6 வயது சிறுவனான சஞ்சய், பெரும்பள்ளம் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் சகோதரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அருகிலுள்ள பெரும்பள்ளம் ஓடை பகுதிக்கு சிறுவன் சஞ்சய் சென்றது தெரியவந்தது. சிறுவன் ஓடையில் தவறி விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில்...

சத்தியமங்கலத்தில் செயல்படும் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி: முதலீட்டாளர்கள் சாலை மறியல்

By MuthuKumar
05 Nov 2025

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்படும் டி.ஆர். கார்த்தி சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏலச்சீட்டு காலம் முடிந்த பிறகும் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும், ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஈரோடு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 6 கிலோ கஞ்சா: போலீசார் விசாரணை

By Suresh
05 Nov 2025

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ரோந்து பணியின் போது ஒதுக்குப்புறமாக இருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் உள்ள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

நாகர்கோவில் அருகே பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த 13 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By MuthuKumar
05 Nov 2025

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த 13 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் விஷ்ணு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பட்டாசுகளை கொளுத்த மண்ணெண்ணெய் விளக்கைக் கொடுத்த அவரின் உறவினரான சந்திராதேவி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ...

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் விசாரணை

By Suresh
05 Nov 2025

சென்னை: வன்முறையை தூண்டும் விதமாக த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து தொடர்பான வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 'ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. நள்ளிரவு போடப்பட்ட பதிவு என்பதால் பெரும்பாலானோர் பார்க்க வாய்ப்பு இல்லை' என வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். ...

குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது

By MuthuKumar
05 Nov 2025

ஓசூர் அருகே பெண் தொழிலாளிகள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நீலு குமாரி குப்தா (23) ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரின் நண்பரான சதீஷ் குமார் என்பவருக்கும் பகிர்ந்துள்ளதால், அவரையும் கைது செய்ய போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். ...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி நடப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார்

By Suresh
05 Nov 2025

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி நடப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். 'வாக்காளர் பட்டியலில் இருந்து யார் பெயரையும் அதிமுக நீக்க விடாது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்தான் கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்பட வேண்டும்'...

சின்சினாட்டி மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் அஃப்தாப் புரேவல் 2-வது முறையாக வெற்றி!

By MuthuKumar
05 Nov 2025

வாஷிங்டன்: சின்சினாட்டி மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் அஃப்தாப் புரேவல் 2-வது முறையாக வெற்றி பெற்றார். நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக ஜனநாயகக் கட்சியின் ஸோரான் மம்தானி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ...

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான ஜெயபாலன் ஜாமின் மனு நவ.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Suresh
05 Nov 2025

நெல்லை: கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான ஜெயபாலன் ஜாமின் மனு நவ.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித், சரவணன், ஜெயபாலன் கைது செய்யப்பட்டனர். 2வது முறையாக ஜெயபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையை நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏற்கெனவே ஜெயபாலனின் ஜாமின் மனுவை...

காலிப் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்ப தடை விதித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

By Suresh
05 Nov 2025

மதுரை: வி.ஏ.ஓ. பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை, காலிப் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்ப தடை விதித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதிலளிக்கவும் நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார். ...