ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மாலை 6.30 மணிக்கு அத்துமீறல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
மத்தியப் பிரதேசத்தில் குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழப்பு
மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலின் நுழைவு வாயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது ...
தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் நாளை (ஆகஸ்ட் 6) தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் நாளை (ஆகஸ்ட் 6) தொடங்குகிறது. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 இலட்சம் மாணவர்களுடன் நாளை தொடங்குகிறது. அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்! ...
இந்தியா மீதான வரி இருமடங்கு உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரி உயர்த்தப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் வரி உயர்த்தப்படும். இந்தியா மீதான வரி இருமடங்கு உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை...
உத்தரகாசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
உத்தராகண்ட்: உத்தரகாசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.08.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் உத்தரகாசியில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மயமாகியுள்ளனர். ...
ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய ஆபாச வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. ராவணின் தலை வெட்டப்படும்போது மீண்டும் முளைப்பது போல் வீடியோக்கள் வெளியாகின்றன. ஆபரேஷன் சிந்தூரின்போது சட்டவிரோத...
காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காசா: காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருவதாக வேதனை அடைந்துள்ளனர். ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிவு
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு...
பீகாரில் ராகுல் - தேஜஸ்வி நடைபயண யாத்திரை ஒத்திவைப்பு
டெல்லி: பீகாரில் ராகுல் - தேஜஸ்வி இணைந்து ஆக.10ல் தொடங்க திட்டமிட்டிருந்த நடைபயண யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் வோட் அதிகார் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆர்.ஜே.டி. அறிவித்துள்ளது. நடைபயணத்துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்றும் ஆர்.ஜே.டி. தகவல் தெரிவித்துள்ளது. ...