விருதுநகரில் கைதி தப்பியோட்டம்: 3 போலீசார் சஸ்பெண்ட்

விருதுநகர்: கைதி தப்பியோடியது தொடர்பாக எஸ்.எஸ்.ஐ., காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் கேரள சிறையில் இருந்த கைதி பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்துள்ளனர். அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து சென்றபோது கைதி பாலமுருகன் தப்பியோடியுள்ளார். கைதி பாலமுருகன் தப்பியோடியது தொடர்பாக எஸ்.எஸ்.ஐ. நாகராஜன், காவலர்கள் ரவிஜோதி, சுதாகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்....

நரேந்திர மோடி மைதானத்தில் டி20 உலக கோப்பைக்கான இறுதிப்போட்டியை நடத்த திட்டம்!!

By Porselvi
2 hours ago

அகமதாபாத் : 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியை, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள இத்தொடருக்கான போட்டிகளை டெல்லி, சென்னை, மும்பை கொல்கத்தா ஆகிய மைதானங்களிலும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...

இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து மாருதி சுசூக்கி சாதனை..!!

By Lavanya
3 hours ago

டெல்லி: இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து மாருதி சுசூக்கி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனமாக மாருதி சுசூக்கி உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆனதாகவும், அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம்,...

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாகனங்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை..!!

By Lavanya
3 hours ago

சென்னை: சென்னை வேளச்சேரி - பள்ளிக்கரணை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குப் பூட்டுப் போட்டு, எச்சரித்து அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்தனர். சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்குப் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். ...

கிறிஸ்தவர்கள் படுகொலையா? - நைஜீரியா விளக்கம்

By Porselvi
3 hours ago

நைஜர் : கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதற்கு அந்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "தீவிரவாதத்தை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம், கிறிஸ்தவர்களை எதிர்த்து அல்ல. நைஜீரியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும்வரை, தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவின் உதவியை வரவேற்போம்,” எனவும் நைஜீரியா கூறியுள்ளது....

காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்தது சரியே : ஐகோர்ட்

By Porselvi
3 hours ago

சென்னை : காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புகாரில் முரண்பாடுகள் உள்ளதால், கீழமை நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என விளக்கம் அளித்து, முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்...

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..!!

By Lavanya
3 hours ago

மும்பை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர்.14ல் விசாரணைக்கு ஆஜராகவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டது. ...

பீகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா கார் மீது தாக்குதல்

By Porselvi
3 hours ago

பாட்னா :பீகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா கார் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆர்ஜேடி ஆதரவாளர்கள் காரை சூழ்ந்து கொண்டு காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சரான விஜயகுமார் பாஜக சார்பில் லஹிசாரா தொகுதியில் போட்டியிடுகிறார். ...

தமிழ்நாட்டில் ரோடு ஷோவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By Neethimaan
4 hours ago

  சென்னை: தமிழ்நாட்டில் ரோடு ஷோவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கியது. அதில்; கூட்டத்தை முறைப்படுத்துதல், அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதை தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டும். 100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சி, தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறை போன்ற அடிப்படை...

தாராபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்: பயணிகள் அச்சம்

By Lavanya
4 hours ago

தாராபுரம்: தாராபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். தாராபுரம் பேருந்து நிலையம், சிஎஸ்ஐ பள்ளி வளாகம், காவல் நிலையம், முருகன் கோயில் வீதியில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. தாராபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விட வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ...