ராஜஸ்தானில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது

ராஜஸ்தான்: பலோட்ரா மாவட்டத்தில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். திருடிய கச்சா எண்ணெயை அகமதாபாத் - ராஜ்கோட் சாலையில் வாகன ஓட்டிகளிடம் விற்க முயன்றபோது சிக்கினர். கச்சா எண்ணெய் திருடிய குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்தனர். ...

கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்: எடப்பாடி பழனிசாமி

By thamizh selvi
15 Aug 2026

கோவை: கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை. மக்களின் பிரச்சனைக்காக எந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். போதைப்பொருள் புழக்கத்தால் கல்லூரி மாணவர் கொலை நடந்ததா என்று விசாரிக்க வேண்டும்...

11 மதுபானங்கள் மீதான தடை நீக்கப்பட்டதன் பிண்ணனியில் பயமா? பதற்றமா? டீலிங்கா? - அதிமுக கேள்வி

By thamizh selvi
15 Aug 2026

சென்னை: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விதித்த தடையை 24 மணி நேரத்தில் நீக்கும் அளவுக்கு என்ன நடந்தது. 11 மதுபானங்கள் மீதான தடை நீக்கப்பட்டதன் பிண்ணனியில் பயமா? பதற்றமா? டீலிங்கா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ...

நிர்வாகத்திறனற்ற கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

By Pooja S
15 Aug 2026

சென்னை: சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 மாணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும்...

புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்

By Pooja S
15 Aug 2026

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய கார் இல்லை என்றும், பல உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருப்பதாக பேரவையில் பேசி, அவைத் தலைவரிடம் கார் வேண்டி கோரிக்கை...

பெரம்பூரில் ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.24 லட்சம் மாயம்

By thamizh selvi
15 Aug 2026

சென்னை: பெரம்பூரில் ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் ரூ.24 லட்சம் மாயமானது. வாகனத்தின் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ...

நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம்: எம்.பி. கனிமொழி சுதந்திர தின வாழ்த்து

By Pooja S
15 Aug 2026

சென்னை: எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர். நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்...

வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா கசிவு

By thamizh selvi
15 Aug 2026

வேலூர்: முள்ளிபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு அருகே செயல்படும் ஐஸ் கட்டி ஆலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை தண்ணீரில் கலந்து தீயணைப்பு வீரர்கள் செயலிழக்க வைத்தனர். ...

உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திரதின விழா

By Pooja S
15 Aug 2026

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திரதின விழா. முதலில் வந்தே மாதரம் பாட எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது சுதந்திரதின விழா. ...

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து

By thamizh selvi
15 Aug 2026

சென்னை: பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ...