சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ. 74,360க்கு விற்பனை!!
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ. 74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.123க்கும், ஒரு கிலோ ரூ.1,23,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ...
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
டெல்லி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிறந்த தலைமையுடன் மக்களின் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வரும் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ...
பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆக்ஸ்ட் 11ல் தொடங்கும் : அண்ணா பல்கலை.
சென்னை : பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆக்ஸ்ட் 11ல் தொடங்கும் என்று அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18ல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். உடல் நலப் பாதிப்புக்காக டெல்லி மருத்துவமனையில் சிபி சோரன் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவராக சிபு சோரன் 38 ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 2009 - 2010ஆம்...
41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,500 கோடிக்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,554 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ...
பாதுகாப்பு, விண்வெளி துறையில் ரூ.5,600கோடி முதலீடு..!!
சென்னை: பாதுகாப்பு, விண்வெளித்துறையில் தொடர்புடைய 3 நிறுவனங்கள் தூத்துக்குடியில் ரூ.5,600 கோடி முதலீடு செய்துள்ளன. சக்தி குழுமம், அக்னிகுல் காஸ்மோஸ், எதர்னல் எக்ஸ்புளோரேசன் நிறுவனங்கள் ரூ.5,600 கோடி முதலீடு செய்துள்ளது. 3 நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ...
தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது YEEMAK நிறுவனம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீட்டில் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்ட் தொழிற்சாலையை அமைக்கிறது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான YEEMAK. இதன்மூலம் 7,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ...
தென் தமிழ்நாட்டில் வளர்ச்சியை நோக்கி முதலீடுகள்!!
சென்னை : சிங்கப்பூரைச் சேர்ந்த REG நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.4953 கோடி முதலீட்டில், ஃபைபர் உற்பத்தி ஆலை அமைக்கிறது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும், கங்கைகொண்டானில் தென்கொரியாவின் Hwaseung நிறுவனம் ரூ.1720 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைக்கிறது. இதன் மூலம் 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். ...
காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரை
சென்னை: காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. தற்காலிக ஊழியர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கான வருடாந்திர பணி மதிப்பீடு தொடர்பான படிவங்களில் சாதி குறிப்பை நீக்க வேண்டும். சாதி பற்றிய தகவல்கள் மதிப்பீட்டில் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் நீக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ...