அமெரிக்கா: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை
பென்சில்வேனியா: அமெரிக்கா பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு மற்றும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சசூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ...
"கோல் இந்தியா" நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீடு சலுகை அறிவிப்பு..!!
கொல்கத்தா: கோல் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.1 கோடி விபத்து காப்பீடு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கான இழப்பீடு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் கோல் இந்தியா நிறுவனத்தில் 2.5லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ...
போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளார் அதிபர் டிரம்ப்!!
வாஷிங்டன்: போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை அதிபர் டிரம்ப் சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 23 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என கூறப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட...
கர்நாடக முன்னாள் முதல்வரிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை செய்துள்ளது. தனது 3 வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து சைபர் கிரைம் கும்பல் ரூ.3 லட்சம் திருடியதாக சதானந்த கவுடா புகார் கொடுத்தார். ...
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.141க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு..!!
டெல்லி: அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ...
பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: தமிழ்நாடு அரசு!
பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ...
சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார் மோகன்லால் காத்ரி. மேலும், சென்னை சைதாப்பேட்டையில் மார்க் பிராப்பர்ட்டீஸ் நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணா ரெட்டி கல்பாக்கத்தில் இசைக் கல்லூரி நடத்தி...
வைக்கோலை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யுமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: வைக்கோலை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யுமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு அதிகரிப்பதால் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ...