காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்தது சரியே : ஐகோர்ட்
சென்னை : காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புகாரில் முரண்பாடுகள் உள்ளதால், கீழமை நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என விளக்கம் அளித்து, முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார்...
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..!!
மும்பை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர்.14ல் விசாரணைக்கு ஆஜராகவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டது. ...
பீகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா கார் மீது தாக்குதல்
பாட்னா :பீகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா கார் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆர்ஜேடி ஆதரவாளர்கள் காரை சூழ்ந்து கொண்டு காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சரான விஜயகுமார் பாஜக சார்பில் லஹிசாரா தொகுதியில் போட்டியிடுகிறார். ...
தமிழ்நாட்டில் ரோடு ஷோவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் ரோடு ஷோவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கியது. அதில்; கூட்டத்தை முறைப்படுத்துதல், அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதை தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டும். 100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சி, தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறை போன்ற அடிப்படை...
தாராபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்: பயணிகள் அச்சம்
தாராபுரம்: தாராபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். தாராபுரம் பேருந்து நிலையம், சிஎஸ்ஐ பள்ளி வளாகம், காவல் நிலையம், முருகன் கோயில் வீதியில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. தாராபுரத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விட வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ...
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை: பிரசாந்த் கிஷோர்
டெல்லி: வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ...
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிறிசில்டா புதிய மனு!!
சென்னை : மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிறிசில்டா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். ஜாய் கிறிசில்டாவின் மனுவுக்கு வரும் 12 ஆம் தேதிக்குள் ஜாய் கிறி சில்டாவின் புதிய மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய...
அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் - சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு தோனி ஓய்வு பெறும் திட்டம் இல்லை; அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...