வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை: பிரசாந்த் கிஷோர்

டெல்லி: வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ...

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிறிசில்டா புதிய மனு!!

By Porselvi
9 hours ago

சென்னை : மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிறிசில்டா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். ஜாய் கிறிசில்டாவின் மனுவுக்கு வரும் 12 ஆம் தேதிக்குள் ஜாய் கிறி சில்டாவின் புதிய மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

By Lavanya
10 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய...

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் - சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி

By Porselvi
10 hours ago

சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு தோனி ஓய்வு பெறும் திட்டம் இல்லை; அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...

தனது போட்டோ மூலம் மோசடி: பிரேசில் மாடல் அதிர்ச்சி

By Lavanya
10 hours ago

பிரேசில்: ஹரியானாவில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தல் மோசடி நடந்தது குறித்து பிரேசில் மாடல் லாரிசா அதிர்ச்சி அடைந்துள்ளாரம். இது எந்த மாதிரியான செயல் என்று வீடியோ வெளியிட்டு இந்திய அரசியல்வாதிகளுக்கு லாரிசா கேள்வி எழுப்பி உள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் லாரிசாவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். லாரிசா புகைப்படத்தை...

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை..!!

By Lavanya
10 hours ago

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் வனத்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ...

கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு - தமிழ்நாடு அரசு

By Porselvi
10 hours ago

சென்னை : கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ...

நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

By Lavanya
10 hours ago

நெல்லை: நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் உடன்பிறப்பே வா சந்திப்பின்போது நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்தார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ...

தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி. தினகரன் விமர்சனம்

By Lavanya
10 hours ago

சென்னை: தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியின் மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகின்றனர். பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெள்ளத்து என தெரிவித்தார். ...

ஒன்றிய அரசின் செயல்பாடு என்பது நீதிமன்றத்திற்கு இழைக்கும் அநீதி : உச்சநீதிமன்றம் கண்டனம்

By Porselvi
10 hours ago

டெல்லி : 2021ல் கொண்டுவரப்பட்ட தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைக்க, ஒன்றிய அரசு கோரிக்கை வைத்ததற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி பேசுகையில், "“நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் சில வழக்குகளை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நினைக்கிறதா? எதுவாக...