திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியது!!

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீரில் உள்வாங்கியதால் பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடினர். ...

கடலூரில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு..!!

By Lavanya
13 hours ago

கடலூர்: கடலூரில் லாரி மீது எதிரே வந்த பைக் மோதியதில் சிதம்பரத்தைச் சேர்ந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆரோக்கிய ஸ்டேன்லி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ...

விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார் - சபாநாயகர் அப்பாவு

By Porselvi
14 hours ago

நெல்லை : விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ""விஜய் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்றே தெரியவில்லை அதை அவரிடமே கேட்டு சொல்லுங்கள். கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்,"இவ்வாறு தெரிவித்தார். ...

அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன்; நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது: ராமதாஸ் பேட்டி

By Lavanya
14 hours ago

திண்டிவனம்: நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது என தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்து வருகிறார். அன்புமணி தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அரசியலில் சில தவறுகளை நான் செய்ததுண்டு. நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது. மற்றொரு தவறு அன்புமணிக்கு கட்சித் தலைவர்...

பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!!

By Porselvi
14 hours ago

சென்னை : பரப்புரை கூட்டங்கள், ரோடு ஷோ நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. ...

பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்துரையாடல்..!!

By Lavanya
14 hours ago

டெல்லி: உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்றது எப்படி என்று பிரதமர் மோடி வீராங்கனைகளிடம் கேட்டறிகிறார். உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ...

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த தற்போதைக்கு தனி சட்டம் தேவையில்லை - ஒன்றிய அரசு

By Porselvi
14 hours ago

டெல்லி : ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த தற்போதைக்கு தனி சட்டம் தேவையில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த தற்போதைய சட்டங்களே போதுமானது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ...

பீகாரில் முதல்கட்ட தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குபதிவு

By Lavanya
14 hours ago

பீகார்: பீகாரில் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் முதற்கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகார் தேர்தலில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சஹார்சா தொகுதியில் அதிகபட்சமாக 15.27% வாக்குகள் பதிவு. லக்கிசரா தொகுதியில் குறைந்தபட்சமாக 7% வாக்குகள் பதிவாகியது....

மெக்சிகோ அதிபருக்கு முத்தம் தந்தவர் கைது

By Porselvi
14 hours ago

மெக்சிகோ : மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு பொது இடத்தில் திடீரென முத்தம் தந்த நபரை போலீசார் கைது செய்தனர். மெக்சிகோவில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கிளாடியாவின் பின்னால் வந்த நபர் திடீரென முத்தமிட்டார். 63 வயதான கிளாடியா ஷீன்பாம் பார்டோ, கடந்த ஆண்டு மெக்சிகோ அதிபராக பதவியேற்றார். ...

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எலக்ட்ரீசியன் கொலை: ஒருவர் கைது

By Lavanya
14 hours ago

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புளியந்தோப்பைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஸ்மத் பாஷா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு செல்போனை திருடிச் சென்ற சுரேஷ் (36) கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான சீனிவாசன் என்பவருக்கு வலைவீசிவருகின்றனர். ...