சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை!!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 164க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
சென்னையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் கைது
சென்னை: சென்னை மண்ணடியில் போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 22 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 பேரையும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ...
சென்னையில் பைக் சாகசம்: இருவர் உயிரிழப்பு
சென்னை: பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். ரேஸ் பைக் மோதியதில் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த குமரன்(49) உயிரிழந்தனர். பைக் சாகசம் செய்த ராயப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுகைல் உயிரிழந்தார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர் சுகைலின் நண்பர் சோயல் என்பவர் படுகாயம் அடைந்தார்....
சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பும் தமிழ்நாடு அரசு
சென்னை: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. தேவஸ்தானம் கேட்டு கொண்டதால் வரும் 14 ம் தேதி தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும். தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். ...
தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை: பணி நிரந்தரம் கோரி சென்னை மெரினா கடலில் இறங்கி போராடிய 83 தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 51 பெண்கள் உள்பட 83 தூய்மை பணியாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ...
ரூ.127.57 கோடியில் 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு
சென்னை: ரூ.127.57 கோடியில் 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.159 கோடியில் 2232 அரசு பள்ளிகளில் 2236 ஆய்வகங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 2026-27க்குள் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 37,626 அரசு...
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
திருப்பத்தூர்: கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ...
ஆர்சிபி அணியை விற்க முடிவு
மும்பை: நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்சிபி அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது ...
நவம்பர்-06: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...