சென்னை கண்ணகி நகரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது
சென்னை: சென்னை கண்ணகி நகரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஸ்ரீதர் - வினிஷா தம்பதியினர் 3-வது பெண் குழந்தையை தரகர்கள் மூலமாக ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். தகவலறிந்து குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கண்ணகி...
தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன், ராமநாதபுரம் - சங்கர நாராயணன், வேலூர் - சிவசுப்பிரமணியன், பெரம்பலூர் - கண்ணன், மயிலாடுதுறை - பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகளுக்குள் கஞ்சாவை மறைத்து கொண்டுவந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ...
வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 7-ம் தேதி 340, 8-ம் தேதி 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ...
2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம்: எந்த நகர்வும் இன்றி கிடப்பில் இருப்பதாக RTIயின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்
டெல்லி: 2024 ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை, நிதி ஒதுக்கவில்லை எனவும் RTI மூலம் தெரியவந்துள்ளது ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷுப்மன் கில் (C), ரிஷப் பந்த் (WK) (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி,...
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: "ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. பாஜகவின் தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் 'ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதை வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். வாக்குத்திருட்டு குறித்து ஆதாரங்கள் வெளியிட்டபின்பும் தேர்தல்...
இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்
சென்னை: தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், கோவை, தென்காசி, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ...
குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
புதுக்கோட்டை: விராலிமலை அருகே 2019ல் குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.20,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த லதாவின் குழந்தைக்கு மாவட்ட சட்டப்பணிகள் குழு இழப்பீடு வழங்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ...