ஆணுக்கு வழங்கப்பட்ட 9 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து; திருமணமான பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் பலாத்காரம் ஆகாது: பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சண்டிகர்: திருமணமான பெண், வேறு ஒருவருடன் திருமண வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப்பில் திருமணமான பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி பாலியல் உறவில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து...

குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதை தடுக்க தேச பாதுகாப்பு வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By MuthuKumar
19 Nov 2025

புதுடெல்லி: விசாரணை தாமதத்தை காரணம் காட்டி குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதை தடுக்க, நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் மீதான வழக்கு விசாரணைகள் பல ஆண்டுகளாக...

10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்..!!

By Lavanya
19 Nov 2025

பீகார்: 10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் நாளை பதவியேற்கிறார். என்டிஏ சட்டமன்ற குழு தலைவராகவும் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி. நிதிஷ் உடல்நிலை குறித்து சர்ச்சை நிலவும் நிலையில் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு முதல்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

By Lavanya
19 Nov 2025

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது....

தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி: உச்சநீதிமன்றம் கண்டனம்

By Gowthami Selvakumar
19 Nov 2025

டெல்லி: தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு தீர்ப்பாயங்களுக்கான சீர்திருத்த சட்ட விதிகளை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு,...

தேர்தல் ஆணையத்தை ராகுல் மிரட்டுகிறார்: 272 மாஜி நீதிபதிகள், அதிகாரிகள் கூட்டு அறிக்கை

By MuthuKumar
19 Nov 2025

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 272 முக்கிய பிரமுகர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெறுவதாகவும், இதற்கு ஆளும் ஒன்றிய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

By Suresh
19 Nov 2025

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ...

ஆப்கான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி இந்தியா வருகை!

By Francis
19 Nov 2025

  டெல்லி: இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த ஆப்கான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி டெல்லி வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை ஆப்கான் அரசு நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், அல்ஹாஜ் நூருதீனின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.   ...

என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் கட்டாயம் விசாரணையை முடிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

By Gowthami Selvakumar
19 Nov 2025

டெல்லி: என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் இதற்கான சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகாமை தொடர்பான வழக்கை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் ஜாமின் பெறுவதற்காக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். என்.ஐ.ஏ.,...

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!

By Lavanya
19 Nov 2025

ஆந்திரா: புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி இன்று (நவ.,19) காலை புட்டபர்த்தி வந்தடைந்தார். பின்னர், காலை 10:30 மணியளவில் சாய்பாபாவின் மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க பிரதமர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.தொடர்ந்து, நூற்றாண்டு விழாவில்,கலை...