கட்டுக்கடங்காத கூட்டத்தால் 24ம் தேதி வரை சபரிமலையில் தினமும் 75 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வருவதைத் தொடர்ந்து இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தினமும் 75 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைக்கவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த கடந்த 16ம் தேதி...
நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதில் அலட்சியம்; சர்வதேச பருவநிலை மாற்ற குறியீட்டில் 10ல் இருந்து 23வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
புதுடெல்லி: தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் இருந்த இந்தியா, தற்போது 13 இடங்கள் பின்தங்கி 23-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ‘ஜெர்மன்வாட்ச், நியூகிளைமேட் நிறுவனம் மற்றும் கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க்’ ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு பட்டியல், 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஆய்வு...
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது நாளை தீர்ப்பு
டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது! ...
ரயில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி; நவீன பாதுகாப்பு அமைப்புகள் 90% பகுதிகளில் இல்லை: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்
சென்னை: தென்னிந்தியாவின் மிக முக்கிய ரயில்வே வலையமான தெற்கு ரயில்வேயில் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்தன் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அளித்த அதிகாரப்பூர்வ பதிலே...
பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்
பாட்னா: பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார். என்.டி.ஏ. சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், என்.டி.ஏ. கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ...
பல ஆண்டுகளுக்கு பின் கருத்தரித்த நிலையில் கருவில் இருந்த இரட்டை குழந்தைகள் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் சாவு: கணவரும் தூக்குபோட்டு தற்கொலை
திருமலை: திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு உருவான இரட்டை குழந்தைகள் கருவிலேயே இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் இறந்தார். இதனால் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் (40). ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஷ்ரவ்யா (35). இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா...
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளை
பெங்களூரு: பெங்களூருவில் அசோக் பில்லர் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களிடம் இருந்து ரூ.7 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப சென்ற வாகனம் 7 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் சென்றனர். வருமானவரித் துறையில் இருந்து வருவதாகக் கூறி பணம் இருந்த வாகனத்தில் இருந்தவர்களை...
இந்திய வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி '.bank.in' என்ற பிரத்தியேக டொமைனுக்கு மாற்றம்!
கொல்கத்தா: RBI வங்கியின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்களின் வலைத்தள முகவரிகளை '.bank.in' என்ற பிரத்தியேக டொமைனுக்கு மாற்றின. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் SBI, ICICI, HDFC, Axis உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் '.bank.in' என முடியும் புதிய டொமைனுக்கு மாறியுள்ளன. ...
பராமரிப்புப் பணிகள் நடப்பதால் மும்பை விமான நிலையம் நாளை மூடல்: 6 மணி நேரம் விமானங்கள் இயங்காது
மும்பை: மும்பை விமான நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை 6 மணி நேரத்திற்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம ்மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், அத்தியாவசியமான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவ. 20) 6 மணி நேரத்திற்கு அனைத்து விமான...