டெல்லி செங்கோட்டை பகுதியில் போலி வெடிகுண்டை கண்டுபிடிக்காத 7 போலீசார் சஸ்பெண்ட்

  புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வைச் சோதிக்க வைக்கப்பட்ட போலி வெடிகுண்டைக் கண்டுபிடிக்கத் தவறிய 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையின் வடக்கு நுழைவு வாயிலில், கடந்த வாரம் வழக்கமான பாதுகாப்பு ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையைச்...

உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயம்

By Suresh
05 Aug 2025

உத்தராகண்ட்: உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். கீர்கங்காவின் மறுபுறத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பலர் புதையுண்டதாக கூறப்படுகிறது. ...

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் காலமானார்..!!

By Lavanya
05 Aug 2025

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சத்யபால் மாலிக். இவர் பாரதிய கிராந்தி தள், ஜனதா தள், இந்திய தேசிய காங்கிரஸ், லோக் தள், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றில் இணைந்து மக்கள் பணியாற்றி யிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார்

By MuthuKumar
05 Aug 2025

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மே 11 முதல் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ...

பி.ஆர்.எஸ். கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முயற்சி: சந்திர சேகரராவின் மகள் கவிதா பரபரப்பு குற்றசாட்டு

By Lavanya
05 Aug 2025

தெலுங்கானா: பாஜகவுடன் தங்கள் கட்சியை இணைக்க பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு உள்ளேயே கருப்பு ஆடுகள் இருப்பதாக அந்த கட்சியின் எம்.எல்.சியும் சந்திர சேகரராவின் மகளுமான கவிதா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். பி.ஆர்.எஸ் கட்சியில் மறைமுகமான உட்கட்சி பூசல் கவிதாவின் புகாரால் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக இருந்த கே. சந்திர...

மருத்துவ துணைப் படிப்பு.. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: நடப்பு கல்வியாண்டு முதலே அமல்!!

By Nithya
05 Aug 2025

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2023-24ம் கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட...

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

By Suresh
05 Aug 2025

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. முறையீடு தொடர்பாக ஆகஸ்ட் 8ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ...

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜர்!

By Nithya
05 Aug 2025

டெல்லி: ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக...

நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், இனி விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை

By Porselvi
05 Aug 2025

டெல்லி : நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், இனி விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு மாத...

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்!!

By Nithya
05 Aug 2025

டெல்லி: ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜரானார். அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானியிடம் விசாரணைக்கு ஆஜரானார். அனில் அம்பானியின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.   ...