மகனை ஐஎஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி தாய், 2வது கணவர் உபா சட்டத்தில் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகன் உண்டு. இவர் கணவனை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினார்....
பேஸ்புக் மூலமாக 9 ஆண்டு பழக்கம் பாக். சென்று இஸ்லாமியரை மணந்த இந்திய சீக்கிய பெண்
லாகூர்: பஞ்சாபில் உள்ள கபுர்தலா மாவட்டத்தில் உள்ள அமானிபூர் கிராமத்தை சேர்ந்தவர் சராப்ஜீத் கவுர்(48). குருநானக் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் சென்ற 2000 சீக்கியர்களில் இவரும் ஒருவர். நவம்பர் 13ம் பாகிஸ்தானில் இருந்து அனைவரும் திரும்பிய நிலையில் கவுர் மட்டும்...
ரயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும் அதே குடியிருப்பில் வசித்த சதீஷ்...
குடியரசு துணை தலைவருடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு
புதுடெல்லி: குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கார் ஜூலை மாதம் 21ம் தேதி திடீரென தனது உடல்நல காரணங்களை கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் குடியரசு துணை தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் குடியரசு துணை தலைவர் ராதாகிருஷ்ணனை, முன்னாள் குடியரசு துணை தலைவரான ஜெகதீப்...
மும்பையில் பாபா சித்திக் கொலை அமெரிக்காவிலிருந்து பிஷ்னோய் நாடு கடத்தல்: இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறார்
மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024 அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய பிரபல ரவுடிக்கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மாத தொடக்கத்தில், கனடாவில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட அவரை , இந்தியாவுக்கு நாடு கடத்த...
சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பு
புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் இன்று மறைந்த ஆன்மீக தலைவர் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் பாபாவின் சன்னதி மற்றும் மகாசமாதியையும் அவர்...
சிறை கைதிகளுக்கு டெலி மருத்துவ வசதி
புதுடெல்லி: கைதிகளுக்கு தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொலைவில் இருந்தபடி சுகாதார சேவைகள் (டெலி மருத்துவம்) கிடைக்கச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ‘‘சிறைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைப்பதன் மூலம் கைதிகள் மருத்துவமனைகளுக்கு நேரடியாக செல்லாமல், சரியான நேரத்தில் மருத்துவ...
அனுமனை அவமதித்து விட்டதாக டைரக்டர் ராஜமவுலி மீது இந்து அமைப்பினர் புகார்
ஐதராபாத்: இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ‘வாரணாசி’ என்ற பான் வேர்ல்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா முதன்மை வேடத்திலும், பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த மிக பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய திரையில்...
அடுத்த ஆண்டு மே மாதம் முதல் கோடை மழை, வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: கோடை கால பருவத்தில் பயிர் செய்யும் விவசாயிகளின் பயிர்கள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் திடீரென பெய்யும் மழையாலும் பெருத்த சேதம் அடைகிறது. இதற்கு இழப்பீடு கோரி பலதரப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் முதல் காரீப் பருவத்தில் இருந்து வனவிலங்கு தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகள் பசல்...