கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டது: கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்

திருவனந்தபுரம்: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டது என கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சித்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை? என சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ...

ஆந்திராவில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

By Suresh
19 Nov 2025

அமராவதி: ஆந்திராவில் மாத்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மேலும் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திராவில் மரிதுமில்லி பகுதியில் 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 7 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ...

இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தல்: ஒன்றிய அரசு விசாரிக்க உத்தரவு

By Gowthami Selvakumar
19 Nov 2025

டெல்லி: நாட்டின் 8 நிமித்தத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக வெளியான செய்தி கவலை அழைப்பதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் இது குறித்து சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்துமாறு ஒன்றிய அரசுக்கு சூரிய ஸ்வயம் சேவி சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் கடத்தப்பட்டும், காணாமல்...

சபரிமலையில் நேற்று நண்பகலுடன் முடிந்த 43 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம்..!!

By Lavanya
19 Nov 2025

கேரளா: சபரிமலையில் நேற்று நண்பகலுடன் முடிந்த 43 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் பல்வேறு பிரச்சனைகள் பக்தர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மண்டல பூஜைகள் தொடங்குவதற்கு முன்பாகவே பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் செய்வது வழக்கம். பக்தர்களுக்கு குடி தண்ணீர்...

இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு

By Gowthami Selvakumar
19 Nov 2025

டெல்லி: இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.60 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 15.70 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 70,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்புகள்...

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல்

By Francis
19 Nov 2025

  பீகார்: பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் பதவி தொடர்பாக டெல்லியில் இரு கட்சியினர் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.   ...

அரக்கோணத்தில் இருந்து கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர்!

By Suresh
19 Nov 2025

திருவனந்தபுரம்: அரக்கோணத்தில் இருந்து கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர். சபரிமலையில் ஐயப்ப பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மீட்புக்குழு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து 2 குழுக்களைச் சேர்ந்த 60 வீரர்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். ...

சபரிமலையில் தரிசன டிக்கெட் பதிவு மையம் மாற்றம்

By Neethimaan
19 Nov 2025

  திருவனந்தபுரம்: சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி பதிவு கவுன்ட்டர் நிலக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 18ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனுக்குடன் தரிசனம் முடித்து திரும்புமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

எடியூரப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

By Neethimaan
19 Nov 2025

  பெங்களூரு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எடியூரப்பா, டிசம்பர் 2ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2024ல் கல்வி உதவித்தொகை கோரி தன்னை சந்திக்க வந்த சிறுமிக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. ...

தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்க கெடு விதிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

By Ranjith
18 Nov 2025

புதுடெல்லி: நாடு முழுவதும் 20 பார் கவுன்சில் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கு ஒரு முறை பார் கவுன்சில்களுக்கான தேர்தலை இந்திய பார் கவுன்சில் நடத்த வேண்டும். ஆனால் 16 மாநில பார் கவுன்சிலர்களுக்கு 5 வருட பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...