ஆந்திராவில் வெல்டிங் பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வெல்டிங் பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்தனர். வெல்டிங் பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் உடல் சிதறி உயிரிழந்த 5 தொழிலாளர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
பாஜகவின் அடிமையாகிவிட்டது தேர்தல் ஆணையம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் அடிமையாகிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஏஜென்ட் போன்று தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மேற்குவங்க வாக்காளர் பட்டியலை பாஜக வாக்காளர் பட்டியலாக மாற்ற ஆணையம் உதவுகிறது. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மே.வங்கத்தில் வாக்காளர்களை நீக்க அனுமதிக்க...
கேரளாவில் முறையாக பணிக்கு வராத 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் முறையாக பணிக்கு வராத 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். சட்டவிரோதமாக விடுப்பில் இருந்ததுடன், நோட்டீஸுக்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை; மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ...
அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது, சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி : அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு அமலாக்கத்துறை செயல்பட வேண்டும். EDயின்...
இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு!
இமாசல பிரதேசம்: இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. இமாசல பிரதேசத்தில், பருவமழையையொட்டி பெய்து வரும் அதிகளவிலான மழையால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இமாசல பிரதேசத்தில் கடந்த...
பொய்யான தகவல்களை ராகுல் காந்தி பரப்ப வேண்டாம்: தேர்தல் ஆணையம்
டெல்லி: பொய்யான தகவல்களை ராகுல் காந்தி பரப்ப வேண்டாம் என வாக்கு திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது; குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வ ஒப்புதல் ஆவணமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ...
பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் எம்.பி. சந்திப்பு
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் பிரதமரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்தேன். கீழடி விவகாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டேன் என்று கூறினார். ...
ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்..!!
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்து வருகிறார். முதலில் இந்தியப் பொருட்கள் மீது 25% வரியை அறிவித்த டிரம்ப், நேற்று கூடுதலாக 25% வரியை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா...
அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது: உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது; சட்டத்துக்கு உட்பட்டு அமலாக்கத்துறை செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வழக்கு விசாரணையே நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் அந்நபரை சிறையில் வைப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளீர்கள். அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான செயல்பாடுகள் குறித்து...