மேற்கு வங்கத்தில் பலத்த மழை; நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி: சிக்கிம் சாலை துண்டிக்கப்பட்டதால் அவதி

டார்ஜிலிங்: மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்த நிலையில், சிக்கிம் மாநிலத்துடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் டார்ஜிலிங் மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குர்சியோங் உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு பாலம் இடிந்து...

24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

By MuthuKumar
33 minutes ago

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி தொடங்கி கடந்த 2ம்தேதி தீர்த்தவாரியுடன் 9 நாட்கள் நடைபெற்ற விழா நிறைவுபெற்றது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பிறகும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் இன்று காலை காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியதால்...

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழப்பு

By Suresh
4 hours ago

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக சிலிகுரி - டார்ஜிலிங் நெடுஞ்சாலையில் உள்ள தூதியா இரும்புப் பாலம் உடைந்து விழுந்தது. தூதியா ஆற்றில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூதியா ஆற்றின் கரையோரம் இருந்த 20க்கும்...

உலகின் மிக உயரமான இடத்தில் வாகனம் ஓட்டக்கூடிய சாலையை அமைத்து BRO அமைப்பு புதிய சாதனை!

By Francis
7 hours ago

  லடாக்கின் மிக்-லாவில் கடல் மட்டத்திலிருந்து 19,400 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான இடத்தில் வாகனம் ஓட்டக்கூடிய சாலையை அமைத்து BRO அமைப்பு புதிய சாதனை படைத்துள்ளது. உம்லிங்-லா பகுதியில் 19,024 அடி உயரத்தில் சாலை அமைத்து 2021ல் செய்த, சொந்த கின்னஸ் சாதனையை BRO முறியடித்தது.   ...

பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

By Francis
7 hours ago

  பீகார்: பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் வலிவுறுத்தியுள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.   ...

அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்!

By Francis
7 hours ago

  இருநாள் அரசுமுறை பயணமாக வரும் அக்.8ம் தேதி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.   ...

இந்தியாவில் விசாரிக்க கூடாது லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி புதிய வழக்கு

By Ranjith
10 hours ago

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். கடந்த 2019ல் அவர் இங்கிலாந்தில் நாடு கடத்தல் வாரண்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து உச்ச நீதிமன்றமும் அவரை நாடு கடத்த ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்நிலையில், லண்டன்...

12 குழந்தைகள் பலி எதிரொலி கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஆய்வு: கேரளாவிலும் தடை விதிப்பு

By Ranjith
10 hours ago

திருவனந்தபுரம்: ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் 12 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, 6 மாநிலங்களில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (சிடிஎஸ்சிஓ) ஆய்வு நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. மபி, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப்...

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை: ஐதராபாத்தை சேர்ந்தவர்

By Ranjith
10 hours ago

ஐதராபாத்: அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரை சேர்ந்தவர் பொலே சந்திரசேகர்(27). பல் மருத்துவரான இவர் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்காக கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு உள்ள பல்கலைகழகத்தில் படித்து வந்த சந்திர சேகர் டெக்சாஸில்...

நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்கள் மேம்படுத்தும் பணி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By Ranjith
10 hours ago

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர்...