டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 தீவிரவாத டாக்டர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது என்ஐஏ: 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளான 3 டாக்டர்கள் மற்றும் மத பிரச்சாரகரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் வெடிகுண்டு தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். காரில் வெடிபொருட்களுடன் தாக்குதலை நடத்திய காஷ்மீர்...

எஸ்ஐஆர் குழப்பமானது, ஆபத்தானது டிச.4க்குள் எப்படி முடிக்க முடியும்? தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்

By Ranjith
11 hours ago

கொல்கத்தா: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் எஸ்ஐஆர் குளறுபடி குறித்து மிகக்கடுமையான வார்த்தைகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில்,‘‘தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதை...

பிரசவ வார்டில் படுக்கை இல்லை கர்நாடக அரசு மருத்துவமனை வாசலிலேயே பிரசவித்த பெண்: கீழே விழுந்து குழந்தை மரணம்

By Ranjith
11 hours ago

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே உள்ள காகோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ரூபா என்ற பெண் பிரசவத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ஹாவேரி அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் பிரசவ வார்டு நிறைந்துவிட்டதால், படுக்கை வசதி எதுவும் இல்லை என்று கூறி ரூபாவை அட்மிட் செய்யாமல், பிரசவ வார்டின் வெளியே...

டி.கே.சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி பயணம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

By Ranjith
11 hours ago

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2023ல் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது சித்தராமையா முதல்வரானார். அப்போதே, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு டி.கே.சிவகுமார் முதல்வராவார் என்று பேசப்பட்டது. அதற்கேற்ப, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் அதை நினைவூட்டி அவ்வப்போது சர்ச்சையை கிளப்பிக்கொண்டே இருந்தனர். சித்தராமையா முதல்வராகி நேற்றுடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவகுமார் ஆதரவு அமைச்சர் செலுவராயசாமி, டி.கே.சி ஆதரவு...

சபரிமலை தங்கம் திருட்டு தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது

By Ranjith
11 hours ago

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கத்தை திருடியது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை இந்த வழக்கில் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார், முன்னாள்...

ரூ.7 கோடி கொள்ளைக்கு பயன்படுத்திய இன்னோவா கார் திருப்பதியில் கண்டுபிடிப்பு: போலீஸ் தீவிர விசாரணை

By Ranjith
11 hours ago

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த புதன்கிழமை ஏடிஎம்மில் பணம் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட சிஎம்எஸ் ஏஜென்சி வாகனத்தை மறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி, இன்னோவா காரில் வந்த மர்ம கும்பல் ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கை மிகத்தீவிரமாக விசாரித்துவரும் போலீசார், சிஎம்எஸ் நிறுவன வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்திய 2...

அம்பேத்கர் குறித்து அவதூறு உபி சாமியார் மீது வழக்கு

By Ranjith
11 hours ago

பல்லியா: டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு எதிராக பேஸ்புக்கில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆனந்த் ஸ்வரூப் மீது பீம்புரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லியா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தன்பதி தேவியின் பிரதிநிதி அளித்த புகாரின் அடிப்படையில், ஷாம்பவி பீடத்தின் தலைவரும், காளி சேனாவின்...

பணமோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது ஈடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

By Ranjith
11 hours ago

புதுடெல்லி: அரியானாவின் ஷிகோபூரில் நடந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தை தளமாக கொண்டு செயல்படும் ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரியுடன் தொடர்புடைய வழக்கில் பணமோசடி...

தாஜ்மகாலில் அதிபர் டிரம்ப் மகன்

By Ranjith
11 hours ago

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்தியா வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அவர் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக வருகை தந்தார். அவரது வருகையையொட்டி தாஜ்மகாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது....

நவ.23ஆம் தேதி கடைசிநாள் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்: திங்கட்கிழமை சூர்யாகாந்த் பதவி ஏற்பு

By Ranjith
11 hours ago

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. எனவே உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாயின் கடைசி பணி நாள் இன்று ஆகும். இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடை விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டு...