பணமோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது ஈடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுடெல்லி: அரியானாவின் ஷிகோபூரில் நடந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தை தளமாக கொண்டு செயல்படும் ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரியுடன் தொடர்புடைய வழக்கில் பணமோசடி...

தாஜ்மகாலில் அதிபர் டிரம்ப் மகன்

By Ranjith
12 hours ago

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்தியா வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அவர் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக வருகை தந்தார். அவரது வருகையையொட்டி தாஜ்மகாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது....

நவ.23ஆம் தேதி கடைசிநாள் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்: திங்கட்கிழமை சூர்யாகாந்த் பதவி ஏற்பு

By Ranjith
12 hours ago

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. எனவே உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாயின் கடைசி பணி நாள் இன்று ஆகும். இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடை விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டு...

இந்தியாவுடான மோதலில் பாக்.கின் ராணுவம் வெற்றி அமெரிக்காவின் அறிக்கைக்கு பிரதமர் ஆட்சேபனை தெரிவிப்பாரா? காங்கிரஸ் கேள்வி

By Ranjith
12 hours ago

புதுடெல்லி: நான்கு நாள் நடந்த மோதலில் இந்தியா மீது பாகிஸ்தானின் ராணுவ வெற்றி குறித்து அமெரிக்க ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி ஆட்சேபனை தெரிவிப்பாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அமெரிக்க- சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து...

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் உடனடி முன்பதிவு முடிந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பு

By Ranjith
12 hours ago

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் நடை திறந்த கடந்த 16ம் தேதி மாலை முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். அடுத்த 2 நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. நேற்று...

அனில் அம்பானியின் ரூ.1400 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

By Ranjith
12 hours ago

புதுடெல்லி: பணமோசடி வழக்கு விசாரணையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1400கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7500கோடி மதிப்புள்ள...

பெண்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பெருமிதம்

By Ranjith
12 hours ago

அம்பிகாபூர்: பெண்கள் சமூகத்தின் அடித்தளம் என்றும் அவர்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தின் அம்பிகாபூரில் நடந்த பிர்சா முண்டாவின் பிறந்த நாளான, ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய குடியரசு தலைவர், ‘‘சட்டீஸ்கர் மற்றும் நாடு...

மசோதாக்களை நீண்ட நாட்களாக கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம்

By Karthik Yash
13 hours ago

* ஒப்புதல் தர காலக்கெடு விதிக்க முடியாது * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை நீண்ட நாட்கள் கிடப்பில் போட ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய...

அரசியல்சாசன கடமையில் இருந்து நீதித்துறை நழுவக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி

By MuthuKumar
18 hours ago

புதுடெல்லி: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்த குடியரசுத்தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த பதிலுக்கு சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது மற்றும் அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான அரசியலமைப்பு சோதனைகள் மற்றும் சமநிலைகளைப் பராமரிப்பதில் நீதிமன்றம்...

பெங்களூருவில் பிரபலமான உயர் திறனாளர்கள் மையங்கள் அமைக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

By Arun Kumar
19 hours ago

  கர்நாடகா: பெங்களூருவைச் சேர்ந்த ANSR Global நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு உயர் திறனாளர்கள் மையங்களை அமைப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பம் மற்றும் திறன்கள் மேம்பாட்டிற்கான புதிய மையங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 10,000 உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் பெங்களூருவில் உயர் திறனாளர்கள் மையங்கள் அமைக்கும் நிறுவனங்கள்...