பெருவெள்ளத்தால் ஏராளமானோர் மாயம்: உத்தரகாசியில் 3வது நாளாக மீட்பு பணிகள் தீவிரம்

  டேராடூன்: உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக ஏராளமானோர் மாயமானார்கள். அங்கு மீட்பு பணிகள் 3வது நாளாக நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தலாலி என்ற கிராமம் மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஆன்மிக தலமாக கருதப்படும் கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் உள்ளது. அதனால் இங்கு சுற்றுலா...

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

By Arun Kumar
12 hours ago

  புதுடெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வந்தது. 2003ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை ரத்து செய்ய...

மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை : அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி பதிலடி

By Porselvi
12 hours ago

புதுடெல்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி விவகாரத்தையடுத்து விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதாலே உக்ரைன் போர் நடப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி விதித்துள்ளார். முதலில் 25% வரி விதித்த நிலையில், தற்போது கூடுதலாக...

பதவியில் இருக்கும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை வழக்கமானதுதான்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

By Arun Kumar
13 hours ago

  டெல்லி: பதவியில் இருக்கும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை வழக்கமானதுதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். பாஜகவுக்கு மட்டும் ஆட்சிக்கு எதிரான மனநிலை பாதிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, உண்மையான தேர்வு முடிவு ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. புல்வாமா, சிந்தூர் நடவடிக்கை போன்ற பல காரணங்கள் கருத்துக்கணிப்பு மாற்றத்துக்கு...

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் பலி..!!

By Lavanya
13 hours ago

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள இடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் தானாக முன்வந்து உதவ முன்வந்துள்ளனர்....

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு என்ன காரணம்?: ஒன்றிய அரசின் அதீத நம்பிக்கையும், தவறான கணிப்புமே காரணம் என தகவல்

By Gowthami Selvakumar
14 hours ago

டெல்லி: இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு என்ன காரணம். 5 சுற்றுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்றும் முன்னேற்றம் ஏற்படாதது ஏன். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிற்கு 25% வரி விதிக்கப்படும் என்றும் இன்று வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப்...

மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

By MuthuKumar
14 hours ago

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கொட்டரைகரையில் மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 2 பெண்கள் மீது மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. ...

இன்-ஹவுஸ் விசாரணைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

By Porselvi
15 hours ago

டெல்லி : இன்-ஹவுஸ் விசாரணைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஸ்வந்த் வர்மா இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூட்டை மூட்டையாக கட்டி ரூபாய் நோட்டுகள் கருகின. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச...

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் பலி

By MuthuKumar
15 hours ago

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் மரணமடைந்தனர். மலைப்பாதையில் சென்ற ராணுவ வீரர்களின் வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது. ...

நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

By MuthuKumar
16 hours ago

டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற வளாக குழு அறிக்கையை ரத்துசெய்யக் கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியில் இருந்து நீக்குவதற்கு தலைமை நீதிபதி அளித்த பரிந்துரையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மஸி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது....