அச்சமற்ற முடிவு எடுக்கும் உத்வேகத்தை பாட்டியிடம் இருந்து பெற்றேன்: ராகுல் காந்தி உருக்கம்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திராகாந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள்...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோயை டெல்லியில் என்ஐஏ கைது: 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

By Karthik Yash
19 Nov 2025

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டெல்லி வந்த அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கி சூடு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக...

பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.7 கோடி கொள்ளை: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை

By Karthik Yash
19 Nov 2025

பெங்களூரு: பெங்களூரு ஜே.பி.நகர் எச்.டி.எப்.சி வங்கிக்கிளையிலிருந்து ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக சிஎம்எஸ் நிறுவன வாகனத்தில் பணம் அனுப்பப்பட்டது. அசோகா பில்லர் அருகே ஒரு கும்பல் இந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியது. இன்னோவா காரில் வந்த 6-7 பேர், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை நிறுத்தியிருக்கின்றனர். ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தில் ஓட்டுநர்,...

மசோதாக்களுக்கு ஒப்புதல் விவகாரம் ஜனாதிபதியின் 14 கேள்விகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

By Karthik Yash
19 Nov 2025

புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்...

எஸ்ஐஆருக்கு எதிராக கேரளா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

By Karthik Yash
19 Nov 2025

புதுடெல்லி: கேரளாவில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை உடனடியாக நிறுத்தகோரி அம்மாநில அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று...

மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்ஐஆர் பணிச் சுமையால் பிஎல்ஓ தூக்கிட்டு தற்கொலை: தேர்தல் ஆணையம் மீது மம்தா தாக்கு

By Karthik Yash
19 Nov 2025

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச் சுமையால் மன அழுத்தமடைந்த வாக்காளர் நிலை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ரங்கமதி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூத்தின் பிஎல்ஓ 48 வயதான சாந்திமுனி ஓராவ் தனது வீட்டிற்கு...

ஆந்திராவில் 2வது நாளாக 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

By Karthik Yash
19 Nov 2025

அமராவதி: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டம் மாரேடுமில்லி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிக்கப்பட்ட உயர்மட்ட மாவோ தலைவர் ஹிட்மா (53) அவரது மனைவி உட்பட 6 பேர்...

புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவது இந்தியாவை தன்னிறைவு அடைய செய்யும்: நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு

By Karthik Yash
19 Nov 2025

திருமலை: ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் புட்டபர்த்திக்கு வந்த பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், பிரதமர் மோடி ஸ்ரீசத்ய சாய் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக...

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்வு பீகார் முதல்வராக 10வது முறை இன்று பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்: பாட்னா காந்தி மைதானத்தில் பிரமாண்ட விழா

By Karthik Yash
19 Nov 2025

பாட்னா: பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் இன்று 10வது முறையாக பதவி ஏற்க உள்ளார். பாட்னா காந்தி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது....

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆந்திரா அரசு அதிரடி உத்தரவு: மாஜி எம்எல்ஏ உட்பட 3 பேர் மீண்டும் கைதாகின்றனர்

By Karthik Yash
19 Nov 2025

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆட்சியின்போது நடந்த மதுபான ஊழல் வழக்கில் சந்திரகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, அவரது மகன் மோஹித் ரெட்டி, கேவிஎஸ் இன்ப்ரா எம்டி செவிரெட்டி லட்சுமி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள், செவிரெட்டியின் மற்றொரு மகன் ஹர்ஷித் ரெட்டியின் சொத்துக்களை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்...