நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற வளாக குழு அறிக்கையை ரத்துசெய்யக் கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியில் இருந்து நீக்குவதற்கு தலைமை நீதிபதி அளித்த பரிந்துரையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மஸி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது....

மருத்துவமனைக்கு வராமல் சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 மருத்துவர்கள் பணி நீக்கம்: கேரள சுகாதாரத்துறை அதிரடி

By Lavanya
07 Aug 2025

திருவனந்தபுரம்: கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் பணிக்கு வராத ஊழியர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு முன்னதாக இயக்குநரகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. தொடர்ந்து மருத்துவ ஊழியர்களுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும் , அவர்கள்...

விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க தயார்: பிரதமர் மோடி

By MuthuKumar
07 Aug 2025

டெல்லி: இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள், பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இருக்கிறேன் என பிதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க பால் மற்றும் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை...

கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் பணி நீக்கம்

By Arun Kumar
07 Aug 2025

  கேரளா: கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவமனைக்கு வராமல் சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி கேரள சுகாதாரத்துறை டிஸ்மிஸ் செய்தது. ...

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம்.. மக்களவையில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜூ திட்டவட்டம்!

By Nithya
07 Aug 2025

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி மக்களவையில் விவாதிக்க முடியாது என கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதம் நடத்த வேண்டும்...

டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில பிரதமர் உரை

By Arun Kumar
07 Aug 2025

  டெல்லி: டெல்லியில் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். சுவாமிநாதன் அணுகுமுறைகள், கருத்துக்கள் இன்றும் இந்திய விஷயத்தில் காணப்படுகின்றன. மகாகவி பாரதியின் ரத்தினம் சுவாமிநாதன்; அவருக்கு பாரத ரத்னா வழங்கியது கவுரவம். அறிவியலை பொது சேவை ஊடகமாக மாற்றியவர் எம்.எஸ். சுவாமிநாதன் எனவும்...

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி மக்களவையில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜூ திட்டவட்டம்

By MuthuKumar
07 Aug 2025

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி மக்களவையில் விவாதிக்க முடியாது என கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விவாதிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். ...

அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை: வழக்குத் தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், உச்ச நீதிமன்றம் அதிரடி

By Karthik Yash
06 Aug 2025

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் இடம்பெற தடையில்லை என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு ரூ.10லட்சம் அபராதம் விதித்ததோடு, உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரங்களில், முன்னாள் முதல்வர் கலைஞர்,...

கர்நாடகாவில் ஓடும் ரயிலில் இருந்து பிரிந்த 6 பெட்டிகள்

By Karthik Yash
06 Aug 2025

பெங்களூரு: ஷிவமொக்காவிலிருந்து மைசூருவிற்கு சென்ற ரயிலின் 6 பெட்டிகள் தனியாக பிரிந்தபோதிலும், பெரிய விபத்து எதுவும் ஏற்படாததால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஷிவமொக்கா - மைசூரு ரயில் (16205), ஷிவமொக்காவிலிருந்து தினமும் மாலை 4.50 மணிக்கு கிளம்பி இரவு 10.30 மணிக்கு மைசூரு சென்றடையும். நேற்று மாலை வழக்கம்போல ஷிவமொக்காவிலிருந்து கிளம்பிய ரயில் (16205), ஷிவமொக்காவில்...

பீகாரில் மீண்டும் சர்ச்சை டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

By Karthik Yash
06 Aug 2025

சமஸ்திப்பூர்: பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம்,ஹசன்பூர் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி ஆன்லைனில் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் டொனால்ட் டிரம்ப் என்று குறிப்பிட்டு புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர் பெயர்களில் தந்தை பெடரிக் கிறிஸ்ட் டிரம்ப் மற்றும் தாய் மேரி ஆனி...