பெங்களூரு சிறையில் கேக் கட்டிங்: பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கொலை குற்றவாளி சீனிவாஸ் தனத் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் மாலை அணிந்து, செல்போனில் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார் ரவுடி சீனிவாஸ். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சிறைத்துறை ஏடிஜிபி பி.தயானந்தா உறுதி...

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசால் கைது

By Neethimaan
07 Oct 2025

சென்னை: நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், பொதுமக்களுக்கு குடிநீர் கூட வழங்க ஏற்பாடு செய்யாமல் கண்டுகொள்ளாமல் விட்டதாலும், கூட்ட நெரிசல்...

கோவை அருகே பரபரப்பு வீச்சரிவாளுடன் பைக்கில் சுற்றிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்

By Lakshmipathi
07 Oct 2025

*தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தவருக்கு ‘மாவுக்கட்டு’ சிகிச்சை பெ.நா.பாளையம் : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீச்சரிவாளுடன் வாகனத்தில் சுற்றிய 2 பேரை போலீசார் துரத்திச்சென்று கைது செய்தனர். இதில் ஒரு வாலிபர் தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் போலீசார் மாவுக்கட்டு போட்டனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு...

ஆலங்குளம் அருகே பரபரப்பு நிதி நிறுவனம் நடத்தி 200 பேரிடம் ரூ.1 கோடி மோசடி?

By Lakshmipathi
07 Oct 2025

*பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் நிதி நிறுவனம் நடத்தி 200 பேரிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று சுமார் 15 ஆண்டுகளாக செயல்பட்டு...

தமிழகத்தில் இருந்து கடத்திய 405 கிலோ பீடி இலை பறிமுதல்

By Lakshmipathi
07 Oct 2025

ராமேஸ்வரம் : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 405 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.இலங்கை கடற்படையினர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்குரிய முறையில் வந்த பைபர் படகை சோதனை செய்தனர். அப்போது படகில் 11 மூட்டைகளில் இருந்த 405 கிலோ பீடி இலைகளை...

சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை

By Lakshmipathi
07 Oct 2025

சூலூர் : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சிவசாமி (40). இவர் சூலூரில் உள்ள தனியார் கோதுமை ரவை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்கு சடங்குகள் செய்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன் தனது சொந்த...

சென்னையில் பிரபல ஹோட்டலில் அறை எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது..!

By Nithya
07 Oct 2025

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரபல ஹோட்டலில் அறைகள் எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பெண்கள் உள்பட 18 பேரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.   ...

திருவெற்றியூரில் தேசப்பன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!

By Nithya
07 Oct 2025

சென்னை: சென்னை திருவெற்றியூரில் தொட்டிக்குப்பத்தில் தேசப்பன் (59) என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...

அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேர் அதிரடி கைது

By Francis
06 Oct 2025

  அன்னூர்: அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே குமாரபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நாகமணி தம்பதியின் மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில்...

கஞ்சா கடத்திய பாஜ சிறுபான்மையின நல அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேர் கைது: கஞ்சா, கார் செல்போன் பறிமுதல்

By Francis
06 Oct 2025

  சென்னை: காரில் கஞ்சா கடத்திய வழக்கில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு கார், போலீசாரை...