மயிலாப்பூரில் ரவுடியை கொன்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் இன்ஸ்பெக்டர் அதிரடி
சென்னை: மயிலாப்பூரில் ரவுடியை கொலை செய்த வழக்கில் பிடிக்க சென்றபோது, காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை இன்ஸ்பெக்டர் போலீசார் சுட்டுப்பிடித்தனர். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவுடி மவுலி (24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில்...
கத்தை கத்தையாக பணம்: அதிகாரி சஸ்பெண்ட்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மின்வாரிய அலுவலகத்தில் மின் பகிர்மான செயற்பொறியாளராக பணியாற்றியவர் பத்மா. இவர் புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் மின்வாரிய திட்டங்களை பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மின்வாரிய அலுவலகத்தில் தனது அறையில் இருக்கையில் அமர்ந்தபடி கையில் கத்தை, கத்தையாக பணத்தை எண்ணியது...
பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் உட்பட 3 பேர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.19-ல் ஏ.டி.எம்.மில் நிரப்ப பணம் கொண்டு சென்ற வேனை பின் தொடர்ந்து அசோகா பில்லர் அருகே ரிசர்வ் வங்கியின் இலச்சினை பொருத்திய காரில் வந்த கும்பல் ரூ.7 கோடியை கொள்ளையடித்தது. கைது செய்யப்பட்ட அன்னப்பா நாயக், ஜேவியர், கோபால்...
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ: எஸ்பி ஆபீஸ் உதவியாளர் கைது
ஊட்டி: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன்(45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அங்கு காவல்துறையினர் பயணப்படிக்கான வவுச்சர் ஒப்புதல் செய்து பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அண்மையில் வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு...
துண்டு துண்டாக வெட்டி 6 வயது குழந்தை நரபலி?: அரியானாவை உலுக்கிய கொடூரம்
குருகிராம்: குருகிராம் அருகே சாலையோரம் குழந்தையின் தலை மற்றும் கால் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் அருகே குண்ட்லி-மானேசர்-பல்வல் (கே.எம்.பி) விரைவுச் சாலையோரம் உள்ள புதர் பகுதியில், விவசாயி ஒருவர் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் தலை மற்றும் ஒரு...
திருமங்கலம் பகுதியில் போதை பொருள் விற்றதாக சட்ட கல்லூரி மாணவன் உள்பட 4 பேர் கைது: ரூ.27.5 லட்சம், சொகுசு கார் பறிமுதல்
அண்ணாநகர்: திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது, பாடியை சேர்ந்த தியானேஸ்வரனை (26) கைது செய்து 4 போதை ஸ்டாம்புகள், பைக், 2...
ஊட்டி அருகே துப்பாக்கியால் சுட்டு காட்டு மாட்டை வேட்டையாடிய வாலிபர் கைது
*4 பேருக்கு வலை, வாகனங்கள் பறிமுதல் ஊட்டி : ஊட்டி அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை நீலகிரி...
தாராபுரம், சூலூர் அருகே கிளினிக் நடத்திய பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் சிக்கினர்
*மருத்துவ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தாராபுரம் : தாராபுரம், சூலூரில் போலி கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் முத்தையம்பட்டி கிராமத்தில் விநாயகா என்ற பெயரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் வெள்ளைச்சாமி (50). இவர் ஆங்கில மருத்துவ...
பல்லடத்தில் இளம் பெண்ணிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி: 4 வாலிபர்கள் கைது
பல்லடம் : பல்லடத்தில் இளம்பெண்ணிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது பணிக்கம்பட்டி. இங்குள்ள சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நதியா (33). இவர் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தின் பல்லடம் பகுதிக்கு பணம் வசூலிப்பாளராக உள்ளார். கடந்த 17ம் தேதி...