யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் ரவுடி அடித்து கொலை‌: கூட்டாளிகள் 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட தகராறில், ரவுடியை அடித்து கொன்ற கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (எ) மாயாண்டி (20). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன்...

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: குருவி கைது 

By Ranjith
04 Oct 2025

சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சுமார் 30...

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பயணியிடம் 12 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை

By Ranjith
04 Oct 2025

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர், கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊரான பெங்களூருவுக்கு பஸ்சில் புறப்பட்டார். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த டிப்டாப் ஆசாமி, நைசாக பேச்சு கொடுத்தபடி வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் கொடுத்த குளிர்பானத்தை ஜெயராமனுக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த உடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து விழித்து...

தசரா திருவிழாவில் பெண்களை செல்போனில் படம் பிடித்தவருக்கு வெட்டு

By Ranjith
04 Oct 2025

பெரம்பூர்: மூலகொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீ (20), மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வியாசர்பாடி பி.வி.காலனி 23வது தெரு அருகில் நடந்த தசரா திருவிழாவை பார்க்க சென்றுள்ளார். அங்கு, சாமி வேடமிட்ட நபர்களை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர், ஸ்ரீயிடம் செல்போனை...

குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மாமனார் கத்தியால் குத்திக்கொலை: மருமகன் வெறிச்செயல்

By Neethimaan
04 Oct 2025

சேலம்: குடும்பம் நடத்த அனுப்பாத மனைவியை அனுப்பாத மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (54), கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகேஸ்வரியை (32), மேச்சேரி அருகேயுள்ள தொன்னையன்காட்டுவளவை சேர்ந்த...

ஓடும் பஸ்சில் பயங்கரம்: மதுவில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

By Neethimaan
04 Oct 2025

நாமக்கல்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (35). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அதேபகுதியில் உள்ள மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமிதா (40). கார்மெண்ட்ஸ் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு, கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமாருக்கும், சுமிதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த...

பெண்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது

By Neethimaan
04 Oct 2025

தென்காசி: சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்ட யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அம்பை. ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் திலீபன் (35). பட்டதாரியான இவர் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களில், பெண்கள் குறித்து இழிவான கருத்துக்கள் அடங்கிய...

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு 67 வருடம் சிறை

By Ranjith
03 Oct 2025

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சாக்கை பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை மையம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குடில் கட்டி தங்கி இருந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி 18ம் தேதி இரவில் இந்தப் பெண் குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் தாய் எழுந்து...

திற்பரப்பு அருவியில் குளித்தபோது கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் வங்கி ஊழியர் கைது

By Ranjith
03 Oct 2025

மார்த்தாண்டம்: கேரள மாநிலம் கொல்லம் பெரும்புழா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்களுடன் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியும் வந்திருந்தார். அவர்கள் குடும்பத்துடன் திற்பரப்பு அருவியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மது போதையில் குளித்து கொண்டிருந்தார். அந்த வாலிபர் திடீரென அருவியில்...

காந்தி ஜெயந்தியன்று மதுபாட்டில் பதுக்கி விற்ற தவெக நிர்வாகி கைது

By Ranjith
03 Oct 2025

திண்டிவனம்: தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே திண்டிவனம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சி பேருந்து நிறுத்தத்தின் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை விசாரித்தபோது, டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து...