ஓசூர் அருகே பயங்கரம் சுத்தியலால் கொடூரமாக தாக்கி 2 சிறுவர்கள் கொலை: மேலும் ஒரு குழந்தை படுகாயம், சித்தப்பா வெறிச்செயல்
ஓசூர்: ஓசூர் அருகே, மாநில எல்லையில் மனநிலை பாதித்த சித்தப்பா, சுத்தியலால் வெறித்தனமாக தாக்கியதில், 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு குழந்தை படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், யாதவகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சான்பாஷா (39). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான...
போதை சாக்லேட் பயன்படுத்திய எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேர் அதிரடி கைது: போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல்
சென்னை: கஞ்சா, போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த பொத்தேரி பகுதியில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் பலர், பொத்தேரி மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இவர்களை...
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல யூடியூபர் கைது: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்
திருவனந்தபுரம்:இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான கோழிக்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்த பிரபல யூடியூபரை போலீசார் மங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் முகம்மது சாலி (35). சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவர் ஷாலு என்ற பெயரில் 3 யூடியூப் சேனல்களை...
முத்தியால்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் மூலப்பொருளான சூடோ எபிட்ரின் 5 கிலோ பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது
தண்டையார்பேட்டை: சென்னை முத்தியால்பேட்டை பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு கட்டிடத்தில் செயல்படும் அலுவலகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்க உதவும் மூலப்பொருள்களில் ஒன்றான சூடோ எபிட்ரின் என்ற வேதிப்பொருளை பதுக்கி வைத்திருப்பதாக காவல் ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் போதைப்பொருள் வியாபாரி போல், கும்பலில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த...
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி சூறை: விசிக பிரமுகர் அதிரடி கைது
விக்கிரவாண்டி: விழுப்புரம் விசிக மத்திய மாவட்ட செயலாளர் திலீபன் (42), இவர் நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் சென்றார். காரை மயிலம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் (45) ஓட்டினார். விக்கிரவாண்டி சுங்கசாவடியை கார் கடக்க முயன்றபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும் வழியில் மாவட்ட செயலாளரின் கார் சென்றது. அப்போது அங்கு...
பீகாரில் ஊர்க்காவல் படைத் தேர்வின் போது, மயங்கி விழுந்த இளம்பெண்: ஆம்புலன்ஸில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
பாட்னா : பீகாரில் ஊர்க்காவல் படைத் உடல் தேர்வுக்கு வந்த 26 வயது பெண்ணை ஆம்புலன்ஸில் வைத்து நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஜூலை 24ம் தேதி ஊர்க்காவல் படைக்கு ஆட்தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வுக்கு...
திருமணமான 10 நாட்களில் வாந்தி எடுத்த புதுப்பெண் 2 மாத கர்ப்பிணி; கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம் பணம் பறிப்பு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய நண்பருக்கு வலை
சேலம்: சேலத்தில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்த நிலையில், 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம் மாப்பிள்ளை பணம் வாங்கிய நிலையில், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (44). தர்மபுரியில் தனியார்...
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபரிடம் விடிய விடிய விசாரணை: போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நேற்றிரவு சம்பந்தப்பட்ட வடமாநில வாலிபரை சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய பிறகு கவரப்பேட்டை காவல் நிலையத்தில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை நடந்தது. கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், செல்லியம்மன் கோயில் பகுதியை...
புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை: 7 பேர் கைது
அறந்தாங்கி: புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை செய்ய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் காமராஜ் நகரை சேர்ந்த காத்தமுத்து. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது மகன்கள் கண்ணன்(32), கார்த்திக். இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஆவுடையார்கோவில் அடியார்குளம் வடக்கு கரையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். தகவலறிந்து...