மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு

அவனியாபுரம்: மதுரையில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் சுமார் இரண்டரை அடி உயரத்தில் கடந்த 1990ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் உள்ள சிலையை, நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் உடைத்து...

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது

By MuthuKumar
06 Oct 2025

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வாகன சோதனையின்போது கேரளாவிற்கு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி சுனாமி காலனி வழியாக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக எஸ்.ஐ. எட்வர்ட் பிரைட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் சுனாமி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....

பாலியல் பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு; நடிகையின் புகாரில் யூடியூபர் கைது

By MuthuKumar
06 Oct 2025

லக்னோ: திருமணமானதை மறைத்து தன்னுடன் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பண மோசடியிலும் ஈடுபட்டதாக நடிகை அளித்த புகாரில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த மணி மெராஜ், போஜ்புரி மொழியில் நகைச்சுவை காணொளிகளை வெளியிட்டு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் ஆவார். சமூக வலைதளங்களில் ‘வண்ணு தி கிரேட்’ என்ற பெயரில்...

இளம்பெண் அடித்துக்கொலை? காவல்நிலையத்தில் சரணடைந்த கணவரிடம் தீவிர விசாரணை

By MuthuKumar
06 Oct 2025

திருவொற்றியூர்: இளம்பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (26). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதிகா (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்றிரவு கோபால் போதையில் இருந்தபோது திடீரென அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கோபால்,...

சென்னையில் காரில் கஞ்சா கடத்திவந்த பாஜகவின் சிறுபான்மையின நல அணி தேசியசெயலாளர் இப்ராகிம் மகன் கைது: கஞ்சா, கார், செல்போன் பறிமுதல்

By MuthuKumar
06 Oct 2025

அண்ணாநகர்: காரில் கஞ்சா கடத்திய வழக்கில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைக்க உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாக...

ஒரே பெண்ணுடன் இருவர் கள்ளத்தொடர்பு; நண்பரின் மர்ம உறுப்பை அறுத்து கண்ணை தோண்டி கொல்ல முயற்சி: வாலிபருக்கு போலீஸ் வலை

By MuthuKumar
06 Oct 2025

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரின் மர்ம உறுப்பை அறுத்து, கண்ணை தோண்டி எடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(45), கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. வேலைக்கு செல்லும்போது இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார்(39) என்பவரிடம் நட்பு ஏற்பட்டு ஒன்றாக பழகி...

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் போக்சோவில் கைது

By MuthuKumar
06 Oct 2025

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டான். பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு சிறுமியை வீட்டிற்கு அனுப்பி...

சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கத்தியால் கழுத்தறுத்து தாயை கொன்ற மகன்

By MuthuKumar
06 Oct 2025

திருமலை: சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாயை கழுத்தறுத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவரது மனைவி லட்சுமிதேவி. மகன் யஷ்வந்த்குமார் (25). விஜயபாஸ்கர் ஒயின்ஷாப்பில் வேலை செய்கிறார். லட்சுமிதேவி ஈஸ்வர்ரெட்டி நகரில் உள்ள மண்டல பரிஷத் பள்ளி ஆசிரியை. பி.டெக் முடித்துள்ள யஷ்வந்த்குமாருக்கு...

சமயபுரம் அருகே செப். 13ல் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது

By Suresh
06 Oct 2025

திருச்சி: சமயபுரம் அருகே செப். 13ல் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மங்கிலால் தேவாசி, விகம் லால் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ரூ.10 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம், நாட்டுத்துப்பாக்கி பறி முதல் செய்யப்பட்டது. ஏற்கெனவே 5 பேர்...

தீபாவளி சீட்டு மோசடி பெண் போலீஸ் கைது: உடனடி சஸ்பெண்ட்

By Ranjith
05 Oct 2025

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு(42). இவர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். தீபாவளி சீட் பண்ட் திட்டம் என்ற பெயரில் கடலூர் புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணம் வசூலித்துள்ளார். இதில் முதிர்வு அடைந்த 66 பேருக்கு...