தென்கொரியா, மொரீசியஸ், ஜப்பானிலும் போட்டியிடுவார் :பீகாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி குறித்து ராமதாஸ் கிண்டல்

விழுப்புரம் : போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "நாங்கள்தான் பாமக எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது. பீகாரில் போட்டியிடுவதாக போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும். பீகாரில்...

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

By Porselvi
24 Sep 2025

மதுரை: ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம்...

கலைஞர் கற்று தந்த உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை நான் என் கடமையை நிறைவேற்றுவேன் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

By Porselvi
24 Sep 2025

சென்னை : சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "காலையில் இருந்து கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். மாணவர்களின் முகத்தை பார்க்கும்போது உற்சாகம் அடைகிறேன். மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது எனது கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது. எனது உடலில்...

கோட்டூர்புர காவல் நிலைய விசாரணைக்குச் சென்றவர் வீடு திரும்பியதும் மரணம் - எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

By Porselvi
24 Sep 2025

சென்னை : விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பழனி மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால், அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்...

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்க தெலுங்கானா முதல்வருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!!

By Porselvi
24 Sep 2025

ஹைதராபாத் : சென்னையில் நடைபெறும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவிற்கான அழைப்பிதழை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் சந்தித்து வழங்கினார். 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான புதுமைபெண், தமிழ் புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைக்கும் விழா, சென்னை ஜவஹர்லால் நேரு...

ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டம்

By Porselvi
24 Sep 2025

டெல்லி : ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார். இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுவதாகவும்,...

விண்ணில் இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து : 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

By Porselvi
24 Sep 2025

பெங்களூரு : விண்ணில் இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளைச் சேர்ந்த 12,149 செயற்கைக்கோள்கள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான 56 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அண்டை நாட்டுக்கு சொந்தமான செயற்கைக்கோள் 1 கி.மீ. தொலைவில்...

2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

By MuthuKumar
24 Sep 2025

சென்னை: 2021, 2022, 2023 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021, 2022, 2023-ம் ஆண்டிகளில் தலா 30 பேருக்கு இந்த விருதுகளானது வழங்கப்படஉள்ளது. இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக்கலைகள் இதர பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள...

H-1B விசா கட்டண உயர்வில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வெள்ளை மாளிகை பரிசீலிப்பதாக தகவல்

By MuthuKumar
24 Sep 2025

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் H-1B விசா கட்டணத்தில் அதிகப்படியான கட்டண உயர்வை சில நாட்களுக்கு முன்பு அறிவித்த நிலையில், மருத்துவர்களுக்கு புதிய கட்டணங்களிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத தொழிலாளர்களின் விசா மீதான கட்டுப்பாடு என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் ஒரு அறிவிப்பை வெளிட்டார்....

15 நாளுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்க வேண்டும்: எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

By Karthik Yash
23 Sep 2025

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும். வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி குறித்து அறிக்கையை அளிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்,...