தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகில் நம்பர் ஒன் நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை ரூ.16 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலையில்...
வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
டெல்லி: ஒன்றிய உள்த்துறையின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை வங்க மொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பாடல் எழுதப்பட்ட வங்க மொழி மீதான நேரடி தாக்குதல். நாட்டின் பன்முகத்தன்மையை சிறுமைப்படுத்தும் செயலில் ஒன்றிய உள்துறை ஈடுபட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பான முதல்வரின் சமுக...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்
டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார். சிபு சோரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்...
டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு
டெல்லி: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடந்த 2024-ம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினராக உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லியில் தங்கும்போது எல்லாம் அருகில் உள்ள பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இன்று காலை அவர் திமுக எம்.பி. சல்மாவுடன்...
முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை. முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்தவாரம் வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில்...
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்...
சினிமாவில் 33 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்
சென்னை: சினிமாவில் 33 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். 'நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். ரசிகர்களின் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "சினிமா எனும் அற்புதமான...
ரூ.16 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை: தூத்துக்குடியில் நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடியில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை முதல்வர் நாளை (4ம் தேதி) துவக்கி வைக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானத்தில் தூத்துக்குடி வருகிறார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட்...
உலகின் நம்பர் ஒன் பிரசாதம்; 310 ஆண்டுகளை நிறைவு செய்தது திருப்பதி லட்டு: 50 காசில் தொடங்கி தற்போது ரூ.50க்கு விற்பனை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாகவும், கட்டணத்தின் பேரிலும் வழங்கப்படுகிறது. இதனால் திருப்பதி என்றாலே அனைவரின் நினைவில் வருவது லட்டு பிரசாதம்தான். திருப்பதி லட்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் மிகவும் பிரபலமானது. அத்தகைய லட்டு நேற்றுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது....