முசிறி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை
சென்னை: முசிறி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த...
கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறுப்புடன் செயல்பட வேண்டும்; அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு சேப்பாக்கம் பொதுப்பணித்துறை பயிலரங்கத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். அப்போது; சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்துறை பயிலரங்கில், கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...
தமிழ்நாடு அரசின் 7 திட்டங்களை உள்ளடக்கிய கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா கோலாகலமாக தொடங்கியது
சென்னை: தமிழ்நாடு அரசின் 7 திட்டங்களை உள்ளடக்கிய கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா சென்னை நேரு உள்ளரங்கில் கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில்...
ரஷ்யாவுடன் இணைந்து உ.பி.யில் ஏ.கே.203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை: பிரதமர் மோடி
லக்னோ: நாட்டில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 'அல்டிமேட் சோர்ஸிங் இங்கிருந்து தொடங்குகிறது' என்ற கருப்பொருளில் 2,400 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கைவினை தொழில்கள், ஜவுளி, தோல் பொருட்கள், வேளாண், தகவல் தொழில் நுட்ப...
வேளாண் வணிகத் திருவிழா 2025 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செப்டம்பர் 27 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் "வேளாண் வணிகத் திருவிழா 2025" விழாவில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெற வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு...
ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு விரைவில் ‘அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்’: நிறைவேறுகிறது தெற்கு ரயில்வேயின் லட்சியத் திட்டம்
மானாமதுரை: இந்தியாவின் கடைக்கோடி எல்லையான ராமேஸ்வரத்தை, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவுடன் இணைக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வடஇந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, காசி, புவனேஸ்வர், செகந்திராபாத் உள்ளிட்ட 12 நகரங்கள் வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் காஷ்மீருக்கு நேரடியாக ரயில்கள் இதுவரை...
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தனிநபரை பழிக்கும் செயல் அல்ல, விளிம்புநிலை மக்களை இழிவுபடுத்தும் செயல்: செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம். விளிம்புநிலை மக்கள் அளித்த வாக்குகளே என் குரலாகவும், அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என்று இழிவுபடுத்துவதா என எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்டேஸ்வரன் தேர்வு செய்துள்ளோம்: வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
சென்னை: பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்டேஸ்வரன் தேர்வு செய்துள்ளோம் என கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் பாமக சட்டமன்றக்...
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
சென்னை: தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்) மாநாட்டில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின்...