ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு விவசாயிகள் பயன்பெறலாம்

  விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் 2025-26க்கான தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் 340 ஹெக்டேரில் அமைக்க ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு வேளாண் துறை மூலம் 340 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்பட உள்ளனர். திட்டத்தில் பயன்பெற விரும்பும்...

லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கலசலிங்கம் பல்கலை

By Ranjith
22 Jul 2025

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: கலசலிங்கம் பல்கலைக்கழகம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை உலக திருக்குறள் மையம் சார்பில் உலக அளவில் நூறு நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சார்பில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில் திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதனை...

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

By Ranjith
22 Jul 2025

  ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6,7,8வது வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அய்யம்பட்டி தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமணம் மஹாலில் நடைபெற்ற முகாமை நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் துவக்கி வைத்தார். இதில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர்...

வத்திராயிருப்பு அருகே மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி உயிரிழப்பு

By Francis
21 Jul 2025

  வத்திராயிருப்பு, ஜூலை 22: வத்திராயிருப்பு அருகே மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி நெடுங்குளத்தை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் நேற்று அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்பொழுது மரத்தில் உள்ள...

வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

By Francis
21 Jul 2025

  அருப்புக்கோட்டை, ஜூலை 22: அருப்புக்கோட்டை அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராலிங்சன்(40). லாரி டிரைவர். இவர் தூத்துக்குடியில் இருந்து லாரியில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் உள்ள தனியார் எடை நிலையம் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக...

காரியாபட்டியில் நீதிமன்ற கட்டிடம் அமையும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

By Francis
21 Jul 2025

  காரியாபட்டி, ஜூலை 22: காரியாபட்டியில் நீதிமன்ற கட்டிடம் அமைய உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றம் தற்போது பேரூராட்சி சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி...

தாய், மகனை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

By Ranjith
20 Jul 2025

  சிவகாசி, ஜூலை 21: சிவகாசி அருகே சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி கார்த்தீஸ்வரி(48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கார்த்தீஸ்வரியின் வீட்டிற்கு வந்த மணிகண்டன், சேகர், சிவமுத்து மற்றும் 5 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறு...

புகையிலை பொருட்கள் பறிமுதல்

By Ranjith
20 Jul 2025

  சிவகாசி, ஜூலை 21: சிவகாசி அருகே பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் இசக்கிராஜா (27) என்பவர் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாரனேரி போலீசார் அதிரடி...

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

By Ranjith
20 Jul 2025

  விருதுநகர், ஜூலை 21: ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாதர் சங்க வடக்கு ஒன்றிய மாநாடு விருதுநகர் சந்துரு நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒன்றிய தலைவர் நாகேஸ்வரி தலைமை தாங்கினார். சங்கர் கொடியேற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஜெயப்பாண்டி முன் மொழிந்தார்....

மாமனாரை தாக்கிய மருமகன் போலீசார் வழக்கு பதிவு

By MuthuKumar
19 Jul 2025

சிவகாசி, ஜூலை 20: சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த செல்வம் மகன் அஜெய் (23). இவருக்கும் பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகள் சந்தனமாரிக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 5 மாதத்தில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மாடசாமி...