ராஜபாளையம் அருகே வேன் மோதி கேமராமேன் பலி
ராஜபாளையம், டிச.15: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தென்காசி ரோட்டில், சிவகிரி பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தவர் குருநாதன்(37). இவர் ராஜபாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துவிட்டு, தனது டூவீலரில் சிவகிரி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரசு மருத்துவமனை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார், இவரது டூவீலர் மீது மோதியது. இதில்...
சாத்தூரில் சாலையோரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
சாத்தூர், டிச.15: சாத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் ரயில் நிலையத்தின் வழியாக தினசரி இரு மார்க்கத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் மும்பை, சென்னை, பெங்களூர், குருவாயூர், திருவனந்தபுரம், தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றன. ரயில்களில் பயணம்...
சுய தொழில் பயிற்சி
சிவகாசி, டிச.13: சிவகாசி 43வது வார்டு பகுதியில் ஒன்றிய அரசின் தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு குறித்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து தையல்கலை பயிற்சி, கை எம்ப்ராய்டரி, அழகு கலை, சணல் பை தயாரித்தல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சி வகுப்புகளில்...
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம் மனு
ராஜபாளையம், டிச.13: ராஜபாளையம் 31வது வார்டு திருவனந்தபுரம் தெருவில் உள்ள ஐந்து தெருக்களும் குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் இருந்து வருகிறது. தென்காசி சாலையில் இருந்து சங்கரன்கோவில் சாலைக்கு புறவழிச் சாலைகள் இல்லை. இதன் காரணமாக அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சியில் புதிதாக சாலை அமைத்து தரும்படி கோரிக்கை...
மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விருதுநகர், டிச.13: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் தொடர் சாரல் மழை...
பி.சி, எம்பிசி, சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர், டிச.12: பிசி, எம்பிசி, சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது....
டூவீலர் மீது கார் மோதி ஆசிரியர் பலி
ராஜபாளையம் டிச. 12. ராஜபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்தார் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வின்சென்ட்(80). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோதை நாச்சியார் புரம் விலக்கு பகுதியில் வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையில் இருந்து ஒரு...
அருப்புக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு
அருப்புக்கோட்டை, டிச. 12: அருப்புக்கோட்டை அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன்...
அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
அருப்புக்கோட்டை, டிச. 11: அருப்புக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம்...