காதல் தகராறு கொலையில் மேலும் 2 பேர் கைது
சாத்தூர், ஜூலை 11: சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரேஸ்வரன்(35). இவர் தம்பி சிங்கேஸ்வரன் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் உறவினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்த ராஜபாண்டி, விஜயபாண்டி, மகேஸ்வரன் மற்றும் இருவர் சேர்ந்து ஒத்தையால் கிராமத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்...
செவிலியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஜூலை 11: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்கள் வள்ளியம்மாள், முத்துமாரி தலைமையில் மாநில துணைச் செயலாளர் விமலா தேவி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி பணியில்...
காரியாபட்டியில் புதிய ஊராட்சி அலுவலகம்: அமைச்சர் திறந்து வைத்தார்
காரியாபட்டி, ஜூலை 10: காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய அரசு கட்டிடங்களை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார். காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. காரியாபட்டி பந்தனேந்தல் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், எசலிமடையில் கலையரங்கம், மாங்குளத்தில் ரேஷன் கடை ஆகிய கட்டிடங்களை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்....
டூவீலர் மீது வாகனம் மோதி குழந்தை, தம்பதி படுகாயம்
சிவகாசி, ஜூலை 10: சாத்தூர் அருகே டூவீலர் மீது வாகனம் மோதி 2 வயது குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். சாத்தூர் அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன்(39). இவர் தனது மனைவி ஷோபனா(32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் சிவகாசியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மயிலாடுதுறை பஸ் நிறுத்தம்...
உயர்கல்வி சேர்க்கைக்கு நாளை குறைதீர் கூட்டம்
விருதுநகர், ஜூலை 10: உயர்கல்வி சேர்க்ைக தொடர்பாக நாளை சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது...
டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
ஸ்ரீ வில்லிபுத்தூர், ஜூலை 9: ஸ்ரீ வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் துணை ஆளுநர் முத்துராமலிங்க குமார், அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை மருத்துவர் காளிராஜிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் சின்னதம்பி, பொருளாளர்.முத்துவேல்ராஜா, முன்னாள்...
இலுப்பையூர் கிராமத்தில் ரூ.1.20 கோடியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
திருச்சுழி, ஜூலை 9: திருச்சுழி அருகே இலுப்பையூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். திருச்சுழி அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் ரூ.1.20 கோடி மதிப்பில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய...
35 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் சாவு
ஸ்ரீ வில்லிபுத்தூர், ஜூலை 9: தனியார் மில்லில் வேலை பார்த்தவர் 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன்(35). இவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில்...
சிவகாசி அருகே தொழுவத்தில் கட்டிய மாடுகள் திருட்டு
சிவகாசி, ஜூலை 8: சிவகாசி அருகே தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்தவர் குருசாமி(73). விவசாய தொழில் செய்து வருகின்றார். இவர் தனது தொழுவத்தில் 8 பசுமாடுகளை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழுவதில் கட்டி வைத்திருந்த 4...