நூறுநாள் வேலை திட்ட குறைகளை தெரிவிக்கலாம்

விருதுநகர், செப்.13: நூறுநாள் வேலை திட்ட புகார்களை குறைதீர்ப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் கடந்த ஆக.6 முதல் பணியாற்றி வருகிறார். நூறுநாள் வேலை...

தூய்மை பணியாளர் வாகனம் மோதி சாவு

By Ranjith
12 Sep 2025

சிவகாசி, செப்.13: சிவகாசி நேரு காலனியை சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது உறவினர் காளிமுத்து என்பவரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் முருகேசனும், காளிமுத்துவும் டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் சென்றுள்ளனர். அந்த பகுதியில்...

பதுக்கி வைத்த பட்டாசுகள் பறிமுதல்

By Ranjith
12 Sep 2025

சிவகாசி, செப்.13: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக சித்துராஜபுரம் சங்கர் நகரை சேர்ந்த முத்துராஜ் மகன் தினேஷ்குமார்(22), சித்துராஜபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்புராம் மகன் அருண்குமார்(23), திருநெல்வேலி மைப்பாறைப்பட்டியை சேர்ந்த வெங்கடராயலு மகன் ராமமூர்த்தி(43) ஆகியோர்...

இமானுவேல்சேகரன் சிலைக்கு மரியாதை

By Ranjith
11 Sep 2025

ராஜபாளையம், செப்.12: தியாகி இமானுவேல்சேகரன் நினைவுதினத்ைதயொட்டி, ராஜபாளையம் மலையடிப்பட்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ராஜபாளையம் தொகுதி திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராஜன், திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மகளிர் அணி சுமதி ராமமூர்த்தி,...

முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது

By Ranjith
11 Sep 2025

காரியாபட்டி, செப்.12: மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது. இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார். திமுக முன்னாள் அமைச்சரும், நிதியமைச்சர் தங்கம்தென்னரசுவின் தந்தையாருமான வே.தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மல்லாங்கிணறில் உள்ள அவரது நினைவிடத்தில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் திமுகவினர் மரியாதை செலுத்த உள்ளனர்....

நெடுஞ்சாலை அருகே கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

By Ranjith
11 Sep 2025

மண்டபம்,செப்.12: உச்சிப்புளி ரயில்வே கேட் பகுதியில் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக வளர்ந்துள்ள கருவேலம் மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சிப்புளி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டுப் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் கருவேலம் மரங்கள் அதிகமாக...

அனுமதியின்றி மண் அள்ளியவர் கைது

By Ranjith
10 Sep 2025

சிவகாசி, செப்.11: வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி மண் அள்ளியவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை அருகே நதிக்குடி கிராமத்தில் ஆற்று புறம்போக்கு பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நதிக்குடி விஏஓ முருகன் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி...

கோயில் அருகில் கிடந்த சடலம்

By Ranjith
10 Sep 2025

சிவகாசி, செப்.11: சிவகாசி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள காலி இடத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி விஏஓ செல்லசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசுக்கு தகவல்...

நள்ளிரவில் தீப்பிடித்த டூவீலர்கள்

By Ranjith
10 Sep 2025

சிவகாசி, செப்.11: சிவகாசி அருகே விஸ்வநத்தம் கணேசன் காலனியை சேர்ந்தவர் பிச்சை மகன் காளிராஜன்(40). இவர் வாஷிங்மிஷின் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். தொடர்ந்து நள்ளிரவில் காளிராஜன் டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீப்பொறி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரிலும் விழுந்ததால்...

வெம்பக்கோட்டையில் 2 மணிநேரம் கனமழை

By Ranjith
10 Sep 2025

ஏழாயிரம்பண்ணை, செப்.10: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நேற்று மதியம் முதல் மேக மூட்டத்துடன் இருந்த வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழந்து வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்...