10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஜூலை 16: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்கள் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர்...
சாத்தூரில் எடப்பாடி பேசும் இடத்தை பார்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ
சாத்தூர், ஜூலை 16: சாத்தூரில் ஆக.8ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பேச இருக்கும் இடத்தை அதிமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில்...
விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை, ஜூலை 16: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நிலங்களை சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க எடுக்க கூடாது என்று வலியுறுத்தி காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்,...
இலவச வீட்டுமனை பட்டா வழங்குக கிராம மக்கள் மனு
விருதுநகர், ஜூலை 15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காரியாபட்டி ஒன்றியம் பாம்பாட்டி ஊராட்சி பணிக்கனேந்தல் கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், காரியாபட்டி ஜெகஜீவன்ராம் காலனியில் 250 ஆதிதிராவிட குடுமபங்களும், பனிக்கனேந்தல் கிராமத்தில் 80 ஆதிதிராவிடர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் 150 குடும்பத்தினர் தினக்கூலிகளாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில்...
நீதிமன்ற வழக்குகளுக்கு செப்.30க்குள் சமரச முறையில் தீர்வு காணலாம்: நீதிபதி பேச்சு
விருதுநகர், ஜூலை 15: விருதுநகர் மாவட்ட சமரச சப்சென்டர் மூலம் ஜூலை 1 முதல் செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகமையை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி அங்காள ஈஸ்வரி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,குடும்ப பிரச்னை, வாகன விபத்து, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்னை, சமரத்திற்கு உட்பட்ட...
இருக்கன்குடியில் இன்று மின்தடை
சாத்தூர், ஜூலை 15: சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி, நென்மேனி துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறவுள்ளன. இதனையொட்டி அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, சிறுக்குளம், நல்லான்செட்டிபட்டி, சுந்தரக் குடும்பன்பட்டி, செட்டுடையான்பட்டி, குண்டலகுத்தூர், சிவந்திபட்டி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, நென்மேனி, எம்.நாகலாபுரம், சிந்துவம்பட்டி, கோஸ்குன்டு, முத்தார்பட்டி, ராமசாமிபுரம், பாப்பாகுடி, வீரார்பட்டி, சொக்கலிங்காபுரம், நாருகாபுரம் காளப்பெருமாள்பட்டி ஆகிய...
சாத்தூர் வழியாக செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
சாத்தூர், ஜூலை 14: சாத்தூர் மார்க்கமாக செல்லும் திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை வழியாக பாலக்காடுக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவைக்கு சாத்தூர், விருதுநகர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இப்பகுதிகளில்...
புதிய தங்க முலாம் பூசிய கலசத்தில் கும்பாபிஷேகம்
வில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில், புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயிலுக்கு அதிகளவில், தமிழகத்தி பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சீனிவாச பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக புதிதாக தங்கம் முலாம் பூசப்பட்ட கலசமும்...
டூவீலர் மோதி ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
காரியாபட்டி, ஜூலை 14: மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம், மாதப்பூண்டியைச் சேர்ந்த ஏழுமலை (55), வேட்டவலத்தைச் சேர்ந்த செல்வம் (38), ஏரம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (40), சொரத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (42) ஆகியோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரியாபட்டி அருகே...