பணம் திருடியதாக நாடகம் டிரைவர் உள்பட இருவர் கைது
சிங்கம்புணரி, அக்.24: மதுரையில் இயங்கி வரும் கடலை மிட்டாய் கம்பெனியில் டிரைவராக தங்கப்பாண்டியன்(30) வேலை செய்து வருகிறார். மதுரை ஐராவதநல்லூர் எம்ஜிஆர் காலனியில் வசித்து வரும் இவர், கடந்த 17ம் தேதி கடலை மிட்டாய் விற்ற பணத்தை வசூல் செய்து கொண்டு திருப்பத்தூரில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்எஸ் கோட்டை காவல் நிலையத்திற்கு...
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
விருதுநகர், அக்.18: விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்லாங்கிணரை சேர்ந்த அய்யாசாமி (54), அரசு பேருந்தில் டிரைவராக உள்ளார். நேற்று சிவகாசியில் இருந்து விருதுநகர் நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, ஆனைக்குட்டம் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றியுள்ளார். சிவகாசி வடமலாபுரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (43)...
ரோட்டில் கிடந்த முதியவர் சாவு
சிவகாசி, அக்.18: சிவகாசியில் ரோட்டில் கிடந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் பரிதாபமாக...
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
விருதுநகர், அக்.18: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி பொது அறுவை சிகிச்சை துறையினரால் நடத்தப்பட்டது. துறைத்தலைவர் அமலன் சங்கர் தொடங்கி வைத்தார். மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெய்சிங் தலைமை வகித்தார். மார்பக புற்றுநோயின் நவீன முன்பரிசோதனைகள் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பது...
போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் தொடர் போராட்டம்
விருதுநகர், அக்.17: விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் 60வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே சம்பந்தப்பட்டவர்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும்....
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மறியல்
விருதுநகர், அக்.17: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விருதுநகரில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 23 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான், ஜார்கண்ட்,...
ஆவியூர் குப்பை கிடங்குகளில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
காரியாபட்டி, அக்.17: ஆவியூரில் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காரியாபட்டி அருகே ஆவியூர்-அரசகுளம் செல்லும் பாதையில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு கிடந்தது. இதனால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் அபாயம் நிலவியது. இது குறித்து பொது மக்கள் கொடுத்த புகாரின்...
வேலை வாய்ப்பு திட்ட விழிப்புணர்வு
ராஜபாளையம், அக். 16: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில், இளைஞர்களுக்கான பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மதுரை மண்டல ஆணையர் அழகிய மணவாளன் அமலாக்க அதிகாரிகள் சீனிவாசன், ஈஸ்வரன், சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தின்...
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் பூக்குழி திருவிழா
வத்திராயிருப்பு, அக். 16: வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த அக்.7ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. ஒரு வார காலம் விரதம் இருந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் பூக்குழி திருவிழாவானது நேற்று காலை அம்மன் சிங்க வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலத்துடன் தொடங்கியது. பின்னர்...