சொமட்டோ, சுவிக்கி தொழிலாளர்கள் மின்சார பைக் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
விருதுநகர், ஜூலை 26: ‘கிக்’ தொழிலாளர்கள் மின்சார பைக் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் காளிதாஸ் வெளியிட்ட தகவல்: இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களை அதிக அளவில் பதிவு செய்ய மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் இணையம் சார்ந்த...
தோணுகால் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: கலெக்டர் ஆய்வு
காரியாபட்டி, ஜூலை 26: காரியாபட்டி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் காரியாபட்டி அருகே தோணுகாலில் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சுகபுத்ரா கலந்து கொண்டு ஆய்வு செய்தார். முகாமில் ஒவ்வொரு துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை,...
வெள்ளூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
சிவகாசி, ஜூலை 26: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மூத்த குடிமகன் சண்முகராஜ் தலைமை வகித்தார். தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். இத்திட்டம்...
விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி
விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி விண்வெளி சங்கம் சார்பில் 2 நாள் விண்வெளி கண்காட்சி கல்லூரி செயலாளர் தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது. விண்வெளி கண்காட்சியை பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் முன்னாள் குழு இயக்குநர் விஞ்ஞானி இங்கர்சால் செல்லத்துரை திறந்து வைத்து பேசுகையில், கஹான்யான்...
தொழிலாளி கொலை வழக்கில் பட்டாசு ஆலை வாட்ச்மேன் கைது
விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான அழகு மலையான் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் முத்துலாபுரத்தை சேர்ந்த பழனிமுருகன்(52) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பழனி முருகனுக்கு இரு மனைவிகள், 3 குழந்தைகள் உள்ளனர். பழனிமுருகன் ஆலையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் கடந்த...
ஆக.4ல் அஞ்சலகங்கள் இயங்காது
விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தகவல்: அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அனைத்து அஞ்லகங்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதால் வரும் ஆக.4ல் அனைத்து அஞ்சலகங்களிலும் ஒரு நாள் மட்டும் எந்தவித பரிவர்த்தனையும் நடைபெறாது என தெரிவித்துள்ளார். ...
ஆண்டாள் தேரோட்டம் 28ம் தேதி விடுமுறை
விருதுநகர், ஜூலை 24: ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு 28ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வௌியிட்ட தகவல்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு 28ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு...
31ம் தேதி தேர்ப்பவனி நென்மேனி புனித இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
சாத்தூர், ஜூலை 24: நென்மேனி புனித இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 31ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது. சாத்தூர் அருகே உள்ள நென்மேனி லொயோலா இன்னாசியார் சர்ச்சின் 136வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்டம் அருட்பணியாளர் வினோத் பால்ராஜ் அடிகளார் புனித இன்னாசியார்...
மனுவிற்கு ஒரே நாளில் தீர்வு முதியோர் உதவித்தொகை ஆணையை வீடுதேடி சென்று வழங்கிய கலெக்டர்
விருதுநகர், ஜூலை 24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனு அளித்த மூதாட்டியின் மனுவிற்கு, ஒரே நாளில் பரிசீலித்து முதியோர் உதவித்தொகை ஆணையை மூதாட்டி இல்லம் தேடி சென்று கலெக்டர் வழங்கினார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மூதாட்டி சந்திரா(75). இவர்...