பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
ஏழாயிரம்பண்ணை, அக்.9: வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி மகன் பாண்டியராஜ்(27). இவர் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள இ.ரெட்டிபட்டியில் இருந்து சிங்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பட்டாசு அலையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி வழக்கம்போல் பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றார். அன்று மதியம் பட்டாசு...
அக்.14ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், அக். 8: சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அக்.14ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு விவவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என வேளாண் துறை...
ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் ஆர்வமுடன் மனுக்கள் அளிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட 28, 29, 33 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து ெகாண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பின்னர்...
விருதுநகரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர், அக். 8: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மனித சங்கிலி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்து பேசுகையில், ‘விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை, மோமோகிராம் போன்ற நவீன முன் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. மார்பக...
கஞ்சா விற்ற வாலிபர் கைது
சிவகாசி, அக்.7: சிவகாசி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் சுடுகாடு பகுதியில் திருத்தங்கல் எஸ்ஐ அருண்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் கஞ்சா விற்பனை செய்த சிறுவர்பூங்கா தெருவை சேர்ந்த சுரேஷ்லிங்கம் (25) என்ற வாலிபரை...
வாலிபருக்கு கத்திகுத்து
சிவகாசி, அக்.7: சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி(24). இவருக்கும் சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று முன்விரோதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கருப்பசாமி, அவரது உறவினர் ஆறுமுககிருஷ்ணன் என்பவருடன் ஜான்பீட்டர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஜான்பீட்டர் வைத்திருந்த கத்தியால் கருப்பசாமியை குத்தியதாக...
பட்டாசு ஆலையில் இரவு நேரத்தில் தயாரித்த புஸ்வானம் பறிமுதல்
சிவகாசி, அக்.7:சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் மாரனேரி எஸ்ஐ சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையில் அனுமதி அளிக்காத இடத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து இரவு நேரத்தில் புஸ்வானம் என்ற பட்டாசை உற்பத்தி செய்து கொண்டு இருந்தனர். அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார்...
குவாரி உரிமையாளர் மீது தாக்குதல்
திருச்சுழி, அக்.4: திருச்சுழி அருகே குவாரி உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு பகுதியில் மதுரை மாவட்டம் வளையங்குளத்தை சேர்ந்த முருகன்(35) என்பவரும், அதே பகுதியில் திருநெல்வேலியை சேர்ந்த மயில்வாகனன் என்பவரும் குவாரி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொழில் போட்டியின்...
காரியாபட்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்
காரியாபட்டி, அக்.4: காரியாபட்டியில் மாடியில் தகர செட் அமைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். காரியாபட்டியை சேர்ந்தவர்கள் தங்கமணி(19), கனகவேல்(19), கருப்பையா(20). இவர்கள் அச்சம்பட்டி பகுதியில் செல்லபாண்டியன் என்பவரது வீட்டில் மாடிப்பகுதியில் தகர செட் அமைப்பதற்காக வெல்டிங் வேலை பார்த்தனர். அப்போது கம்பியை தூக்கிய போது எதிர்பாராத விதமாக உயரழுத்த...